Skip to main content

மதுரை சிறையில் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்!

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளே பலவகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 

prison

 

PRISON

 

தன்காரணமாக கைதிகள் சிறையின் மதில்சுவர்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையின் உள்ளே போதைவஸ்துக்கள், மொபைல் போன் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்கிற நிலையில் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் இதன் காரணமாக கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும்  இடையே இந்த மோதல் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்