Skip to main content

சொத்து குவித்ததாக ஆர்.பி.உதயகுமார் மீது புகார்-புகார்தாரரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Complaint against RB Udayakumar to Anti-Corruption Department for amassing property - Anti-Corruption Department investigates the complainant

 

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதி அன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியிலிருந்த ஆர்.பி.உதயகுமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அதிகளவிற்கு சொத்து குவித்துள்ளதாகவும், மேலும் தனக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் மூலமாகப் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் , அம்மா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையில் தினேஷின் புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் புகார்தாரரான வழக்கறிஞர் தினேஷ் இன்று மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் குறித்த விசாரணைக்காக வந்தார்.

 

இதையடுத்து புகார்தாரர் வழக்கறிஞர் தினேஷிடம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் புகார் தன்மை குறித்தும், புகாரில் குறிப்பிட்டுள்ள ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தினார்.

 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் தினேஷ் பேசியபோது, ஆர்.பி.உதயகுமார் பதவியிலிருந்தபோது அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சைக்கிள் உள்ளிட்ட பரிசுபொருட்களை வழங்கி முறைகேடு செய்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களில் அதிக அளவிற்கு வருமானத்தை காட்டியுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்