Skip to main content

கருவைக் கலைத்தால் திருமணம் செய்துகொள்கிறேன்; இளம்பெண்ணை ஏமாற்றிய காதலன்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

chennai vadapalani police filed young woman love issue case 

 

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளைஞர் ஒருவர் ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

 

சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவருக்கு அவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சுந்தரமூர்த்தி இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். மேலும், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் சுந்தரமூர்த்தியிடம் இதுகுறித்து தெரிவித்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். அதற்கு சுந்தரமூர்த்தி கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம்பெண்ணின் கருவைக் கலைத்துள்ளார்.

 

கருவைக் கலைத்த பின்னரும் சுந்தரமூர்த்தி இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் இதுகுறித்து சுந்தரமூர்த்தியின் பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் இந்த இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இளம்பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.