Skip to main content

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு

 

The candidate who walked out of the counting center was South

 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரண்டு அறைகளில் 16 மேஜைகளில் நடக்கும் 15 சுற்று வாக்கு எண்ணிக்கையில் சுமார் 100 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தபால் வாக்குகளில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்த நிலையில் தற்பொழுது காலை 11.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 34,331 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 12,981 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2,351 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 351 வாக்குகளும் பெற்றுள்ளனர். மூன்று சுற்றுகள் முடிந்துள்ள நிலையில் தற்பொழுது நான்காம் சுற்று எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் பின்னடைவில் இருக்கும் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார். செய்தியாளர்களைச் சந்தித்த தென்னரசு 'பணநாயகம் வென்றது' எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !