Published on 16/05/2020 | Edited on 16/05/2020
இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் 18ஆம் தேதி அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதற்கான பேருந்து வசதி குறித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் அலுவலகம் செல்வதற்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.