Published on 31/03/2018 | Edited on 31/03/2018

29ல் மகாவீர் ஜெயந்தி, 30ல் புனிதவெள்ளி, ஏப்ரல் -1ல் ஞாயிறு வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என்று தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாகும்.
இதனால், மக்களுக்கு பணப் பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், இன்று மார்ச் 31- ம்தேதி சனிக்கிழமை இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.