Skip to main content

கல்லூரி மாணவியை வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுனருக்கு அடிஉதை!

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை வீட்டு ஜன்னல் வழியாக வீடியோ படம் எடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 

The auto driver attacked for took the  video of girl student

 

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 2 ஆம் ஆண்டு பயின்று வரும் கல்லூரி மாணவி ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுநர் ஜன்னல் வழியாக மாணவியை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சரவணனை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர்.

 

police

 

இந்நிலையில் சரவணன் மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். அதேபோல் புகார் கொடுத்தும் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சம்பந்தப்பட்ட மாணவி பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்நிலையில் பொதுமக்களால் தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுனர் சரவணன் டிஸ்சார்ஜ் ஆனதும் போலீஸார் கைது செய்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்