Skip to main content

அம்பேத்கர் சிலை அவமதிப்பு - பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

Published on 25/04/2018 | Edited on 25/04/2018
STATUE

திண்டிவனம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை தொடர்ந்து திண்டிவனம் அருகே ஐந்து அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியயுள்ளனர். அதனால் மேலும் அங்கு பதற்ற நிலை நீடித்து வருகிறது. 

திண்டிவனம் சிறுவாரி பகுதியில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மர்ம நபர்கள்  செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர். காலை எழுந்து அதைக்கண்ட அப்பகுதிமக்கள் இந்த செயலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இறுதியில் போலீசார் விரைந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து மர்ம நபர்களால் ஐந்து அரசு பேருந்துகள் திண்டிவனம் அருகே கண்ணாடி உடைக்கப்பட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.   சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.     

 

 

சார்ந்த செய்திகள்