Skip to main content

'மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம்'- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'The AIADMK is the reason for the increase in electricity tariff' - Minister Thangam Tennarasu interview


மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம் எனத் தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''ஜெயலலிதா இருந்தவரை உதய் மின் திட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்பு இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அன்றைய தினம் அமைச்சராக இருந்த பியூஸ்கொயல் சென்னைக்கு வந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தனி மாநிலமாக இருக்கிறது. இங்க இருக்கக்கூடிய முதலமைச்சரை பார்க்கவே முடியவில்லை. அமைச்சர்களை கேட்டால் அவர்கள் எதையும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லி விமர்சனம் செய்தார்கள். அன்றைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பியூஸ் கோயல் மீது சீறிப்பாய்ந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அன்றைய தினத்தில் பத்திரிகைகளில் பெருவாரியாக வெளியே வந்திருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் கையெழுத்திட்டு தமிழ்நாட்டையும் அதில் இணைத்துக் கொண்டதற்கு பிறகுதான் இந்த மின்சார கட்டணங்கள் என்பது உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் மின்சார உயர்வுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவிக்கும் மிக முக்கியமான ஷரத் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அன்றைய அதிமுக அரசு. ஏன் இந்த மின் கட்டணம் உயர்வு வேண்ட கூடிய சூழ்நிலை வந்தது. இதற்கான சீரழிவுக்கு யாரெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் கடந்த 2011-12 ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது மின்சார வாரியத்திற்கு ஒட்டுமொத்த நிதி இழப்பு 18,954 கோடியாக இருந்தது. பின் நாட்களில் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் அவர்களின் திறனற்ற நிர்வாகத்தின் காரணமாக இந்த செலவு ஏறத்தாழ 94,313 கோடியாக அதிகரித்து. 2021 இல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 76 கோடி ரூபாயாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த நிதி இழப்பு இருந்தது.

இதற்கு காரணம் யார்?  ஆனால் பின்னால் வந்த திமுக அரசு இந்த நிதி இழப்பினை 2021-22 இல் இருந்து 100% அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிதியிழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால் டி.என்.இ.பியின் கடன் 43,493 கோடி ரூபாய். இந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து. 2022-ல் கடன் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 723 கோடி ஆகும். இந்த தொடர்ச்சியான இழப்புகளை சரி கட்டுவதற்காக தான் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் ஒரு கோடி வீட்டு இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. குறைந்த அளவில் தன் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் விலாவாரியாக கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்