Skip to main content

ஆக்சன் த்ரில்லர் சுவாரசியம் ‘கூச முனுசாமி வீரப்பன்’ - நக்கீரன் ஆசிரியர்

Published on 23/11/2023 | Edited on 24/11/2023

 

trailer

 

ஜீ5 நிறுவனம் தொடர்ச்சியாகத் தமிழில் திரைப்படங்களைத் தயாரிப்பதும், வெளியிடுவதுமாக உள்ளது. பல வெப்சீரிஸ்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய கிரைம் டாக்குமெண்டரி சீரிஸ் ஒன்றை அறிவித்துள்ளது.

 

இந்த டாக்குமெண்டரி சீரிஸின் டைட்டில் மற்றும் டிரைலரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கூச முனுசாமி வீரப்பன்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ள இந்த சீரிஸை ஷரத் ஜோதி இயக்கியுள்ளார். அவரோடு ஜெயச்சந்திர ஹாஷ்மியும் வசந்த் பாலகிருஷ்ணனும் இணைந்து கதை எழுதியுள்ளனர். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். 

 

இத்தொடரில், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் பா.பா. மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகிணி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். மேலும் வீரப்பன், “என்ன நடந்ததுனு என்னுடைய வாழ்க்கை வரலாறை அப்படியே எடுத்து சொல்றேன். தப்பு என்னுடையதா இல்ல அரசாங்கத்துதா..” எனப் பேசும் வீடியோ டிரைலரில் இடம்பெற்றுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு சீரிஸ்க்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது. 

 

trailer

 

இந்தத் தொடர் குறித்து நக்கீரன் ஆசிரியர் கூறியதாவது, “நக்கீரன் பெரும் முயற்சி எடுத்து பெரிய ஆபத்துகளை கடந்து வீரப்பனின் முதல் பேட்டி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டபோது, இந்தியா முழுவதும் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆர்வம் இன்றும் குறையவில்லை. பல படங்களில் இதுவரை சொல்லப்பட்ட வீரப்பன் கதைகள் முழுமையானவை அல்ல. 1996-ல் நக்கீரன் எடுத்த வீடியோவை பல சர்வதேச சேனல்கள், நிறுவனங்கள் விலை கேட்டு வந்துள்ளன. யாருக்கும் தரவில்லை. இந்தக் கதையை நேர்மையாக, முழுமையாக சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் கதையும் அதில் இருக்க வேண்டும். இந்தக் கதையை திரிக்காமல் சொல்ல எனது மகள் பிரபாவதி மற்றும் அவர் உருவாக்கியுள்ள டீம் உழைத்துள்ளனர். வெறும் ஆவணப்படமாக அல்லாமல் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லருக்குரிய சுவாரசியத்தோடு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இத்தனை வருடங்கள் காத்து வைத்த விலை மதிப்பில்லாத பத்திரிகை சாதனை, முதன் முறையாக 'கூச முனுசாமி வீரப்பன்' தொடராக ஜீ - ஃபைவ் OTT தளத்தில் வெளியாவதில் நக்கீரன் மகிழ்ச்சி கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

இத்தொடர் பற்றி ‘தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ்’ மேலாண்மை இயக்குநர் பிரபாவதி இரா.வி கூறியிருப்பதாவது,

 

“நம் மக்களின் ரசனை பெரிய மாற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளது. சர்வதேச படைப்புகள் பலவற்றையும் கண்டு நம் மக்களின் எதிர்பார்ப்பும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மேம்பட்டுள்ளது. இந்த சூழலில் உள்ளூர் கதைகளை உலகத் தரத்தில் படமாக்கி வெளியிடும் நோக்கத்துடன் 'தீரன் ப்ரொடக்‌ஷன்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். நக்கீரன் வெளிக்கொண்டு வந்த வீரப்பன் கதையை முதல் தயாரிப்பாக, அதுவும் உலகத் தரத்திலான ஆவணத் தொடராக உருவாக்கியிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். ஜீ - ஃபைவ் OTT தளத்தில் எங்கள் 'கூச முனுசாமி வீரப்பன்' வெளிவந்த பிறகு, இந்தியாவில் 'docu-series' (ஆவணத் தொடர்) என்னும் வகைக்கு பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் பெருகப்போவது உறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வீரப்பனின் மகள் அறிவிப்பு!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Veerappan daughter Vidya Rani announced as the candidate of Naam Tamilar Party!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த 'கரும்பு விவசாயி' சின்னம் மற்றொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து 'சீமானின் சின்னம் என்ன?' என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் நவநீத் துகர் கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். இருப்பினும் வழக்கு விசாரிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முன்னதாகவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் கூட்டத்தில் புதிய சின்னம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அதில், நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி தொகுதி நாடாளுமன்ற வேட்பளராக வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு பாஜகவில் இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு நினைவுத் தூண்! - திறந்து வைத்த ஆளும்கட்சி வேட்பாளர்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் – குப்பம் சட்டமன்றத் தொகுதியானது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியாகும். பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு 8வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், சித்தூர் மாவட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மேல்சபை உறுப்பினரும், குப்பம் சட்டமன்றத் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பரத் போட்டியிடுகிறார். குப்பம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள சாந்திபுரம் அருகே சந்தனக் கடத்தல் வீரப்பனின் போட்டோவுடன் கூடிய நினைவுத் தூண் ஒன்றை சிலர் நிறுவியுள்ளனர்.

Sandalwood smuggling in Andhra Pradesh is a memorial to Veerappan

அந்தப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பரத், வீரப்பன் நினைவுத்தூணைத் திறந்து வைத்து சிரித்தபடியே போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா காவல்துறையினருக்கு முன்பு சிம்ம சொப்பனமாக இருந்து, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் நினைவுத்தூணை ஆளும்கட்சியின் மேல்சபை உறுப்பினரான பரத்  திறந்து வைத்திருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.