Skip to main content

அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 16 பேர் உயிரிழப்பு! சோகத்தில் ஊர்மக்கள்..!

Published on 12/05/2021 | Edited on 12/05/2021

 

16 die in one day in government hospital People in sorrow

 

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. கரோனா அறிகுறி மற்றும் இணை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்கள் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

 

இந்த நிலையில், கரோனா பாதிப்பால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாராயண தேவன்பட்டியைச் சேர்ந்த போலீஸ்காரரின் அறுபது வயது தாய், கம்பத்தைச் சேர்ந்த 54 வயது ஆண், உத்தமபாளையத்தைச் சேர்ந்த 57 வயது ஆண், ஆண்டிபட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த 54 வயது ஆண், மதுரையைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

 

இதேபோல், கரோனா அறிகுறி மற்றும் இணைய நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த 10 பேர் நேற்று (11.05.2021) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் சிலர் அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள். சிலர் குரல் பரிசோதனை செய்யாத நிலையில், மூச்சுத் திணறல் பாதிப்பு, மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என மருத்துவத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

 

இருந்தபோதிலும் ஒரே நாளில் 16 பேர் இறந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சுமார் 340 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கரோனாவுடன் வருபவர்களும் படுக்கை இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

 

இதற்கிடையே, தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 417 பேருக்குப் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதன்மூலம் ஒருநாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. மேலும், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 310 பேர் குணம் அடைந்தனர். இதுவரை வைரஸ் பாதிப்பிலிருந்து 21 ஆயிரத்து 503 பேர் மீண்டுள்ளனர். தற்போது கரோனா பாதிப்புடன் இரண்டாயிரத்து 844 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.