Skip to main content

திமுகவின் வெற்றி இவர்களால் தான்... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... அமித்ஷாவின் அதிரடி திட்டம்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து மத்திய உளவுத் துறையான ஐ.பி.யிடம் ஒரு ரிப்போர்ட் கேட்டுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவர்கள் தந்த ரிப்போர்ட்டில் தி.மு.க.வின் முதன்மைத் தலைவர்களான தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலை மா.செ. எ.வ.வேலு, விழுப்புரம் மா.செ. பொன்முடி, எம்.பி. ஆ.ராசா போன்றவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தந்து, "இவர்களை தேர்தல் களத்தில் முடக்கினால் தேர்தலில் பாதி வெற்றி' என்றுள்ளது. அதனை பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் தந்து, தேர்தல் குறித்து ஆலோசித்துள்ளனர்.

 

dmk



"ஆளும்கட்சியாக இருந்தாலும் ஜாக்கி இல்லாத குதிரையாக உள்ளது அ.தி.மு.க. தேர்தல் நேரத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ். உத்தரவையெல்லாம் அவர்கள் கட்சியினர் மதிக்கமாட்டார்கள். இவர்களை தி.மு.க. தலைவர்கள் ஈஸியாக மடக்கி விடுவார்கள். அதனால் தி.மு.க. பிரமுகர்களை பார்த்து பயப்படாத, பணத்தை தாராளமாக இறைக்கக்கூடிய ஆட்களை நாம் களத்தில் இறக்கினால், தி.மு.க. தலைவர்களை அவர்கள் மாவட்டத்தில் முடக்கிவிடலாம், அப்படி செய்தால் பாதி வெற்றி என்றுள்ளார்கள்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனை எதிர்த்து, பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க. சார்பாக தேர்தல் வேலை செய்வதற்காக, வேலூர் எம்.பி. தேர்தலில் துரைமுருகன் மகனிடம் தோற்றுப்போன ஏ.சி. சண்முகத்தை கேட்டுள்ளது பா.ஜ.க. "நான் செலவு செய்கிறேன், எனக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் வேண்டும்' என அவர் கேட்டுள்ளாராம். திருவண்ணாமலையில் எ.வ.வேலுவை எதிர்க்க, சினிமா தயாரிப்பாளரும், ஃபைனான்ஸ் அதிபருமான தணிகைவேலை களமிறக்கலாமா என ஆலோசித்துள்ளது'' என்றார் உளவுத் துறையில் உள்ள முக்கிய அதிகாரி.

யார் இந்த தணிகைவேல்?

திருவண்ணாமலையில் தி.மு.க. சார்பில் நகராட்சி சேர்மனாக, எம்.பி.யாக, எம்.எல். ஏ.வாக இருந்தவர் முருகையன். அவரது நெருங்கிய உறவினர் தணிகைவேல். மத்திய அமைச்ச ராக செஞ்சி.ராமச்சந்திரன் இருந்தபோது, அவருடன் இருந்ததால் டெல்லி லாபியும் அத்துப்படி. இவர் மீது வைகோவுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் ம.தி.மு.க.வில் இருந்து நீக்கினார். பின்னர், தே.மு.தி.க.வில் இணைந்து பதவியைப் பெற கோடிகளை வாரியிறைத்தார். சில சிக்கல்களில் சிக்கிய தணிகைவேல், தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க. மா.செ. எ.வ.வேலுவை சந்தித்து தி.மு.க.வில் இணைந்தார். லோக்கல் பாலிடிக்ஸால் விலகிக்கொண்டார். தற்போது பா.ஜ.க.வின் மேல்மட்ட தலைவர்கள் சிலரின் நட்பு பட்டியலுக்குள் சென்றுள்ளார். கடந்த 20 வருடங்களாக பணத்தை வாரி வழங்கி தனக்கென நகரத்தில் ஒரு இளைஞர் வட்டத்தினை உருவாக்கி வைத்துள்ளார்'' என்றார்கள் திருவண்ணாமலை அரசியலை அறிந்தவர்கள்.

 

bjp



தணிகைவேல் ஆதரவாளர்கள் ஒருவர் நம்மிடம், "கடந்த வாரத்தில் திருவண்ணாமலை வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவை எதிர்க்க எந்தக் கட்சியிலும் பிரமுகர்கள் இல்லையாம். அதனால் என்னை கட்சியில் இணைத்து "அவருக்கு எதிராக அரசியல் செய்யுங்கள்' என பா.ஜ.க. மேல்மட்டத்தில் கேட்கிறார்கள். நானும் பா.ஜ.க.வில் சேர முடிவு செய்துள்ளேன், 5 ஆயிரம் பேரோடு அங்கு போனால்தான் எனக்கு மரியாதை. நீங்கள் என்னுடன் வரவேண்டும் எனக் கேட்டார்'' என்றார்கள்.


இதுகுறித்து தணிகைவேல் கருத்தறிய அவரை செல்போனில் தொடர்புகொண்டு பேசியபோது, "பா.ஜ.க.வில் நான் சேரப்போவது உண்மைதான். நிதியமைச்சர் நிர்மலா மேடம், முன்னிலையில் இணைகிறேன். யாரையும் எதிர்க்க வரவில்லை, தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்யப்போகிறேன்'' என்றார்.


இதுபற்றி டெல்லியுடன் நேரடித் தொடர்புடைய பா.ஜ.க. பிரமுகர் ஒருவருடன் நாம் பேசிய போது, "இன்னும் கட்சியில் சேராத தணிகைவேலை திரு வண்ணாமலை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கிறார்களா என தெரியாது' என்றவர், "திருவண்ணாமலையை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரின் மகள் ஐதராபாத்தில் செட்டிலாகியுள்ளார். அவர் சமீபத்தில் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் முரளிதரராவை சந்தித்து பா.ஜ.க.வில் இணைந்தார். அந்தப் பெண்மணி மூலமாக முரளிதரராவ் வட்டத்துடன் நெருங்கி, அங்கிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வட்டத்தில் இணைந்து டெல்லியில் தணிகைவேல் லாபி செய்கிறார் என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது'' என்றார். கூடுதலாக, "சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 11 தொழிலதிபர்களை செலவு செய்யச்சொல்லி உத்தரவிட்டுள்ளது எங்கள் கட்சி தலைமை. அதில் 4 கல்வி நிறுவனங்களின் அதிபர்கள் உட்பட 11 பேர் அடக்கம். அதில் சிலர் நேரடி அரசியலிலும் இறங்குவர், மற்றவர்கள் பண உதவி மட்டும் செய்யவுள்ளார்கள்'' என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.