Skip to main content

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அ.தி.மு.க.!  

Published on 10/03/2021 | Edited on 11/03/2021

 

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

 

அதன்படி, முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 177 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே வெளியான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களும், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.

 

தற்போது வெளியாகியுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் சத்திய நாராயணன், மைலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் நட்ராஜ், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் சைதை துரைசாமி, ஆவடி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பாண்டியராஜன், ஜோலார்ப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் கே.சி.வீரமணி, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் கே.பி.முனுசாமி எம்.பி., பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆரணி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் சரோஜா, குமாரப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தங்கமணி, பவானி சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கருப்பணன், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் செங்கோட்டையன், மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பென்ஜமின், அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் கோகுல இந்திரா, ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வளர்மதி, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் அசோக், போளூர் சட்டமன்றத் தொகுதியில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், அவிநாசி சட்டமன்றத் தொகுதியில் சபாநாயகர் தனபால், பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 171 பேர் இடம் பெற்றுள்ளனர். 

 

அதேபோல், தற்போதைய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- பிரபு, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி- மனோரஞ்சிதம், பர்கூர் சட்டமன்றத் தொகுதி- ராஜேந்திரன், கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி- மருதமுத்து, ஓமலூர் சட்டமன்றத் தொகுதி- வெற்றிவேல், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி- எஸ்.ராஜா, சாத்தூர் சட்டமன்றத் தொகுதி- ராஜவர்மன், திருத்தணி சட்டமன்றத் தொகுதி- நரசிம்மன் உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவில்லை. மேலும், தற்போதைய அமைச்சர்கள் நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், அ.தி.மு.க. 177 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளை த.மா.கா., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சிப் பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அ.தி.மு.க. பகிர்ந்தளிக்கும் எனக் கூறப்படுகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.