Skip to main content

சக்கைப்போடு போடும் மணல் கொள்ளை... அமைச்சர்கள் - போலீஸ் உயரதிகாரிகள் வாக்குவாதம்... 

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

Lorry


கரோனா வைரஸ் தொற்று பக்கம் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே மணல் கொள்ளை சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. மணல் கொள்ளையைக் கண்டுபிடித்து லாரியை பறிமுதல் செய்தால் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் நேரடியாக காவல்துறையில் உள்ள இன்ஸ்பெக்டர் முதல் உயர் அதிகாரிகள் வரை தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்கிறார்களாம். இதனால் சில இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே லாரிகள் விடுவிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


புதுக்கோட்டை விராலிமலை பக்கத்தில் மணல் திருட்டு நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைக்க காவல்துறை எஸ்.பி. அருண்சக்திகுமார் மணல் லாரிகளை மடக்க உத்தரவிட்டு, லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல் அறிந்த மாவட்ட அமைச்சர் எஸ்.பியிடம் பேச, அடுத்த முறை கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். வேண்டுமானால் தன்னை டிரான்ஸ்பர் லிஸ்டில் சேர்த்துவிடுங்கள் எனக் கூறியிருக்கிறாராம்.


இதேபோல் கரூரிலும் மணல் திருட்டு அதிகமாக நடக்கிறது என திருச்சி மாவட்ட டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு தகவல் வந்திருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, மணல் லாரிகள் பிடிபட்டுள்ளது. அம்மாவட்ட அமைச்சர் தகவல் கிடைத்தவுடன் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் பேச, உயரதிகாரி உத்தரவு என்று தெரிவித்துள்ளனர். டி.ஐ.ஜியிடம் பேசிய அமைச்சர் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது டி.ஐ.ஜி., தன்னை டிரான்ஸ்பர் லிஸ்டில் சேர்த்துவிடுங்கள், எங்களுக்கு வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காதீர்கள் எனக் கூறியுள்ளாராம். 

 

 


மணல் கொள்ளை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, காவல்துறையில் உயரதிகாரிகள் டிரான்ஸ்பர் லிஸ்ட் தயாரிக்கப்படுவதை அறிந்ததால்தான் மணல் கொள்ளையைத் தடுத்தோம் என்றால் தாங்கள் விரும்பிய இடங்களில் டிரான்ஸ்பர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 


-மகேஷ்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.