Skip to main content

விஜயகாந்த்தை சந்திக்கிறார் பியூஸ் கோயல்

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்க உள்ளார் பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல். 
 

டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்த பியூஸ் கோயல், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அதிமுக - பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது என்றும், பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பியூஸ் கோயல் அறிவித்தார். 
 

Vijayakanth


 

இதனைத் தொடர்ந்து பியூஸ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை சந்தித்து அதிமுக - பாமக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. 

தேமுதிக கேட்கும் தொகுதிகளை தர அதிமுக சம்மதிக்காததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பியூஸ் கோயலின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தேமுதிகவுடனான கூட்டணி இறுதி முடிவு இன்று இரவுக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 



 

சார்ந்த செய்திகள்