Skip to main content

தி.மு.க. மாணவர் அணி சார்பில் கல்வி - சமூகநீதி - கூட்டாட்சித் தத்துவம் குறித்த தேசிய மாநாடு!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

National Conference on Education - Social Justice - Federal Philosophy on behalf of the DMK Student Team!

 

தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அறிவுறுத்தல் படி தி.மு.க. மாணவர் அணியின் சார்பில் வரும், 2022 ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய நாட்களில், கல்வி-சமூகநீதி-கூட்டாட்சித் தத்துவம் என்ற தலைப்பில் தேசிய மாநாடு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. திமுக இளைஞர் அணிச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இம்மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பங்கேற்று கல்வி-சமூகநீதி-கூட்டாட்சி தத்துவம் காக்கின்ற இயக்கமாக மாணவர் அமைப்புகள் செயல்பட சிறப்புரை ஆற்றுகிறார். 

 

இம்மாநாடு இரண்டு நாட்கள், பல்வேறு அமர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இந்திய அளவிலான பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், மேனாள் நீதியரசர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி, கலந்துரையாடவுள்ளனர். 

 

“உங்களது கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழகத்தின் கல்வி மேம்பாட்டை கருத்திற்கொண்டு பணியாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கை சிதைக்க நினைக்கும் பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வியின் மீதான மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களையும், ஆணைகளையும் எதிர்த்து போராடுவதோடு மட்டுமல்லாமல், ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியின் முதற்படியாய் இம்மாநாடு அமைய உள்ளது.

 

இம்மாநாட்டில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளா அரசின் தொழில் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொள்ள உள்ளனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் ஜி.எம்.அக்பர் அலி, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன், தமிழ்நாடு பல்கலைக் கழக ஆசிரியர் சங்க முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர் அய்.இளங்கோவன், தெலுங்கானாவைச் சேர்ந்த திராவிடச் சிந்தனையாளர், சமூகச் செயற்பாட்டாளர் பி.ஸ்ரீகாந்த் ஸ்மித், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வியாளர் பேராசிரியர் அனில் சத்கோபால், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் கல்வி ஆர்வலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன், சமூகச் செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சசிகாந்த் செந்தில், சமூகச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழி ஆகியோர் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற இருக்கிறார்கள்.

 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.சந்தோஷ்குமார், முன்னாள் அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி, சமூகச் செயற்பாட்டாளர் கண்ணன் கோபிநாதன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த கன்னையா குமார், பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் சீமா சிஷ்டி, வங்காள தேசியவாதி கார்கா சாட்டர், எழுத்தாளர் மற்றும் பெரியாரிஸ்ட் திலீப் மண்டல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.

 

மாநாடு பின்வரும் தலைப்புகளை உள்ளடக்கியது:


1) நீட், க்யூட் நுழைவு தேர்வுகளும் அதன் பின்னுள்ள மர்மங்களும் 
2) தேசிய கல்விக் கொள்கை: ஒரு பாசிச நோக்கம் 
3) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7ஆம் அட்டவணை ஒரு மறுபார்வையும், 
  கல்விக் கொள்கைகளில் மாநில சுயாட்சியும் 
4) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் 
5) காவிமயமாகும் கல்வி நிறுவனங்கள் 
6) கூட்டாட்சிக்கு எதிரான அச்சுறுத்தல்களும்; கூட்டாட்சித் தத்துவத்தின் மீள்எழுச்சியும்         
7) சிதையும் ஜனநாயக நிறுவனங்கள் 
8) திராவிட இயக்கமும்; பெண்களின் முன்னேற்றமும் 
9) தமிழக மருத்துவ கட்டமைப்பும், மக்கள் நல மருத்துவமும் 
10) ‘திராவிட மாடல்’ வளர்ச்சி 
11) இந்திய ஒன்றியமும், கூட்டாட்சித் தத்துவமும்

 

தி.மு.க. மாணவர் அணியின் மூலம் நடத்தப்படுகின்ற இந்த மாநாட்டில் மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு, அனைத்து கட்சிகளின் மாணவர் அமைப்புகள், கட்சிகளை சாராத மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளிலிருந்தும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

“ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளையடிக்கிறது” - உதயநிதி குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Udhayanidhi alleges Central govt is looting through GST

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து இன்று (ஏப்.16) காலை பிரச்சாரம் செய்தார் அமைச்சர் உதயநிதி. அப்போது அவர் பேசியதாவது, “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வர் ஆனார் ஸ்டாலின். ஆனால், பழனிசாமியை நீங்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை பழனிசாமி விட்டுக் கொடுத்து விட்டார். நீட் தேர்வுக்கு போராட்டம் பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் அனுமதித்து விட்டார். நீட் தேர்வினால், இதுவரை 21 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. கரோனா காலத்தில், பி.எம்.கேர் என்ற பெயரில், வசூலிக்கப்பட்ட ரூ.32 ஆயிரம் கோடிக்கு இதுவரை கணக்கு காட்டவில்லை. ஆனால், தமிழகத்தில் கரோனா காலத்தில் உதவித்தொகை வழங்கப்பட்டது. இலவச பேருந்து பயண சலுகையை, ஈரோடு மாவட்டத்தில் 21 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் 11 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். காலை உணவுத் திட்டத்தில், 56 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். 4 லட்சம் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை, ரூ.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அறச்சலூர் மலை கோயிலுக்கு செல்ல பாதை வசதி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன. முதலமைச்சர் காலை உணவு திட்டம் இந்தியாவில் சிறப்பு வாய்ந்த திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருப்பது தான் திராவிட மாடல் அரசு சாதனை. கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை. ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது.

தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர். தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். கடந்த தேர்தலில் அடிமை அதிமுக வை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் உதயநிதி தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி- அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இருக்கும் படம், செங்கல், 29 பைசா பதாகை போன்றவற்றை காட்டி அதுகுறித்து விளக்கம் அளித்தார்.