Skip to main content

வேலூர் தேர்தலால் எடப்பாடிக்கு அடிக்கும் ஜாக்பாட்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பணப் பட்டுவாடா செய்த காரணத்தால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 

 

admk



இதனால் இந்த தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சியும் தனது பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க தயாராகி விட்டனர். திமுக சார்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மறுபடியும் போட்டியிடுவார் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சார்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுவார் என்று சொல்கின்றனர். வேலூர் தேர்தல் ரத்து என்று செய்தி வந்தவுடன் அதிகமாக கவலைப்பட்டவர் ஏ.சி.சண்முகம் தான் என்கின்றனர். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடியின் அரசியல் செல்வாக்கு உயரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 
  dmk



இது பற்றி விசாரித்த போது, அதிமுக சார்பாக போட்டியிடும்  ஏ.சி.சண்முகம் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வேலூர் தொகுதியில் இருக்கும் முதலியார் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக தலைமை கருதுவதாக சொல்லப்படுகிறது. தொகுதியில் தேர்தல் ரத்து என்ற செய்தி வந்தவுடன் அடுத்து தேர்தல் எப்ப வந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மருத்துவ  முகாம் மற்றும் தொகுதிக்கு வேண்டிய அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டுள்ளார் என்கின்றனர். வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அந்த வெற்றியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார் என்று எடப்பாடி தரப்பு கூறுகின்றனர். 


தற்போதைக்கு அதிமுக கட்சியில் பாஜகவின் தலைமை ஆதரவோடு ஓபிஎஸ் கையே ஓங்கி இருப்பதாக சொல்கின்றனர். இந்த நிலையில் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் அவருக்கு இணை அமைச்சர் பதவி வாங்கி கொடுத்து ஓபிஎஸ் மகனுக்கு எதிராக களம் இறக்க முடியும் என்று எடப்பாடி கருதுவதாக சொல்கின்றனர். மேலும் மத்தியில் தனக்கு நம்பிக்கைக்கு உரியவர் ஒருவர் இருக்கிறார் என்றும் திருப்தி அடைவார். மேலும் நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பாக இருக்கும் ஒரே உறுப்பினர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் தான்.ஆகையால் அந்த பெயரை ஏ.சி.சண்முகம் வெற்றி பெறுவதன் மூலம் மாற்றிவிடலாம் என்று எடப்பாடி கருதுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.