Skip to main content

கரோனா உறுதி... வீட்டுத் தனிமையில் உத்தரகாண்ட் முதல்வர்! 

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

uttarakhand cm

 

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் திரிவேந்திர சிங் ராவத். இவருக்குத் தற்போது கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

திரிவேந்திர சிங் ராவத்திற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தான் நலமாக இருப்பதாகவும், கடந்த சில நாட்களாக, தன்னைச் சந்தித்தவர்களைக் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, எனக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், நான் வீட்டில் தனிமையில் இருக்கப்போகிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாகத் தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்வதோடு, கரோனா பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்