Skip to main content

சுங்கக் கட்டணம் வசூல் குறித்து மத்திய அமைச்சர் தகவல் 

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Union Minister information on customs duty collection

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் சுங்கச் சாவடிகள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிப்பது குறித்தும், சாலை கட்டணம் வசூலிப்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள 950க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ. 2,21,585.46 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் இருந்து 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான 8 ஆண்டுகளில் ரூ. 2,27,963.25 கோடி சாலை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் ரூ. 17,759.12 கோடியாக இருந்த சாலை சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. அதன்படி, 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ. 18,511.69 கோடி வசூலாகியுள்ளது. 2017 - 18 ஆம் ஆண்டில் ரூ. 22,664.50 கோடி வசூலாகியுள்ளது. 2018 - 19 ஆம் ஆண்டில் ரூ. 25,145.19 கோடி வசூலாகியுள்ளது. 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 33, 907.71 கோடியாக இருந்த சுங்கக் கட்டண வசூல் தொகை 2022 - 23 ஆம் ஆண்டில் ரூ. 48,028. 19 கோடியாக உயர்ந்துள்ளது. 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான கடந்த 8 மாதங்களில் நாடு முழுவதும் வசூலான மொத்த சுங்கக் கட்டணத் தொகை  ரூ. 36,377.79 கோடியாகும்.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள 65 சுங்கச் சாவடிகளிலும் தொடர்ந்து சுங்கக் கட்டண வசூல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2020 - 21 ஆம் ஆண்டில் ரூ. 2,332. 78 கோடியாக இருந்த சுங்கக் கட்டணம் வசூல் கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ. 2,695.77 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 - 23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 65 சுங்கச்சாவடிகளில் ரூ. 3, 817.48 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. 2020- 21 முதல் 2022-23 வரையிலான 3 ஆண்டுகளில்  தமிழகத்தில் மொத்தம் ரூ.8,846 கோடி சுங்கக் கட்டணம் வசூலாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.