Skip to main content

தலைமை செயலகத்தில் தண்ணீர் பஞ்சம்...அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் முடிவடைந்த நிலையிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தலைநகரான சென்னையில் பெரிய ஐடி நிறுவனங்கள் முதல் கார் தயாரிக்கும் தொழிற்சாலை வரை தண்ணீர் தட்டுப்பாடு விட்டு வைக்கவில்லை. இதனால் ஊழியர்கள், நிறுவனங்களின் முதலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வர அறிவுறுத்தியுள்ளது. இது போக சென்னையில் உள்ள உணவகங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள், பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

TN WATER PROBLEM

 

 

அதே போல் சென்னையில் ஒரு குடம் தண்ணீர் ரூபாய் 3 மட்டும், ரூபாய் 5 என விற்கப்படுகிறது. இருப்பினும் இந்த தண்ணீரும் கிடைக்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் தண்ணீர் எங்கு கிடைக்கும் என தேடி சென்று எடுத்து வருவதால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகங்களில் சுமார் 7000 அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

TN WATER PROBLEM

 

 

 

இங்கு அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாள்தோறும் வந்து செல்வதால் கழிவறை மற்றும் குடிநீருக்கு தண்ணீர் அத்தியாவசியத் தேவையாக உள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்னை தலைமைச் செயலகத்தையும் விட்டுவைக்கவில்லை. இதற்கு தீர்வு காண தலைமைச்செயலக வளாகத்தில் 6 இடங்களில் ஆழ்துளைக் குழாய்கள் அமைத்துள்ளனர் தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கத்தினர். இதனால் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகம் மட்டுமின்றி சென்னையில் பல அரசு அலுவலகங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.