Published on 19/10/2018 | Edited on 19/10/2018

சபரிமலை சென்ற பெண் பக்தர்கள் நடைபந்தல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். ஐயப்பன் கோவிலுக்குள் பெண் பக்தர்கள் செல்லக்கூடாது எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். பக்தர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட பேச்சுவார்த்தைக்கு பக்தர்கள் உடன்படவில்லை. அதைத்தொடர்ந்து இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை மற்றும் மற்ற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை ஆகியவை நடந்து வருகிறது.