Skip to main content

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை” - முதல்வர் ரங்கசாமி வேதனை

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

Puducherry Chief Minister Rangasamy comment on Chief Secretary

 

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இன்றைய அலுவலில் உறுப்பினர்கள் கேள்வி பதில் நிகழ்வில் 'புதுச்சேரியில் அரசு அதிகாரிகளை பணி உயர்வு செய்ய தலைமை செயலாளர் தொடர்ந்து தடையாக உள்ளார்' என உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர். குறிப்பாக, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை தலைமை செயலாளர் கொடுப்பதில்லை. அதற்கு உறுதியான முடிவெடுங்கள். இல்லையெனில் சபாநாயகர் இருக்கையில் தலைமை செயலாளரே அமரட்டும்” என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ரமேஷ் ஆவேசத்துடன் பேசினார்.

 

இதையடுத்து, “புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. மத்தியில் இருந்து வரும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் அமைச்சர்களை மதிப்பதில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டினார்.

 

தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் இதையே வலியுறுத்த குறுக்கிட்ட முதல்வர் ரங்கசாமி, “அதிகாரிகள் பதவி உயர்வுக்கு நான் கோப்பு அனுப்பினால் தலைமை செயலாளர் அதை திருப்பி அனுப்புகின்றார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிந்தும் பேசுகிறார்” என அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாதது குறித்து முதல்வர் ரங்கசாமி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.