Skip to main content

பினராயி விஜயனுக்கு கரோனா - மருத்துவமனையில் அனுமதி!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

PINARAYI VIJAYAN

 

இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பினராயி விஜயன் மகளுக்கு ஏற்கனவே கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்