Skip to main content

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.. முதல்வரைச் சூழ்ந்த பெண்கள்!

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

peoples request to puducherry chief minister for ration rice issue

 

ரேஷனில் இலவச அரிசி தருவதற்குப் பதிலாக புதுச்சேரி அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கி வருகிறது. இந்த முறையை மாற்றி மீண்டும் பழையபடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் மக்கள் முறையிட்டனர்.

 

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக் காலத்தில் அரிசி கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றதாகவும், இதனால் இலவச அரிசிக்குப் பதிலாக ரூ. 1000 பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார். தற்போது வரை ரேஷன் அரிசிக்கான பணம் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

 

இதனிடையே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தவளகுப்பம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, "ரேஷன் அரிசிக்கு பணம் வழங்குவதற்குப் பதிலாக மீண்டும் இலவச அரிசி வழங்க வேண்டும். அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் போது பணம் உடனடியாக செலவாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, பணம் ஆண்களின் கணக்குக்குப் போவதால் அவர்கள் வீட்டிற்குக் கூட பணம் தருவதில்லை. அதனால், பணத்திற்குப் பதில் அரிசி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தேர்தல் வாக்குறுதியாக இதைத் தந்ததால் தான் உங்களுக்கு ஆதரவு தந்தோம்" என முறையிட்டனர்.

 

இதனைக் கேட்ட முதல்வர் ரங்கசாமி, “அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அப்பெண்களுக்கு உறுதி அளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.