
உலகம் முழுவதும் இதுவரை 17 கோடிக்கும் அதிகமானவர்களை கரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1,52,734 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,128 பேர் இந்த நோய் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 2,38,022 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 2.56 கோடி பேர் நோய் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 20.26 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். அதே போன்று இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கையும் சீராகக் குறைந்து வருகிறது.