Skip to main content

மதுபோதையில் பாம்புடன் சேட்டை... இளைஞரை தட்டித் தூக்கிய கருநாகம்!

Published on 04/01/2020 | Edited on 05/01/2020

போதையில் பாம்பை சீண்டி மயக்கமடைந்த இளைஞரை மீட்டு பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாகிரித் பகுதியை சேர்ந்தவர் காஜான். இவர் அப்பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். மது பழக்கத்துக்கு அடிமையான அவர், தினமும் மது குடித்து வந்துள்ளார்.
 

f



இந்நிலையில், நேற்று மது குடித்துவிட்டு வயல்வெளி வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த காஜான், அப்பகுதியில் பாம்பு ஒன்று செல்வதை பார்த்துள்ளார். பாம்பை பார்த்த அவர் அதனை கைகளால் பிடித்து சேட்டை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த பாம்பு அவரை பலமுறை கொத்தியுள்ளது. ஆனாலும் அவர் விடாமல் அதனை பிடித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்து சரிந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பயமா.. எனக்கா.. நாகத்திடம் மாஸ் காட்டிய சிங்கப் பெண்; வைரலாகும் வீடியோ

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

woman caught indian cobra

 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வார்கள். ஆனால், அது பொய் என்பது போல 6 அடி நீளமுள்ள இந்தியன் கோப்ராவை கையில் வைத்து விளையாடியப் பெண்ணின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரம் அருகே எல்.ஐ.சி. நிறுவனத்தின் துணைக் கிளை அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த எல்.ஐ.சி. அலுவலகத்தில் கடந்த 4 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஒரு பெரிய நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. திடீரென டேபிள் அடியில் பாம்பு இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 

இந்நிலையில், அலுவலகத்துக்குள் சென்ற பாம்பை பிடிப்பதற்காக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, தீயணைப்புத்துறையை சேர்ந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து அலுவலகத்துக்குள் பட்டறை போட்டிருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

 

பொதுவாக, பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனக் கூறுவார்கள். ஏனென்றால், அது மிகவும் கொடிய விஷ ஜந்துக்களில் ஒன்றாக உள்ளது. அதில், இந்தியாவில் இருக்கும் நாகப்பாம்பை தான் 'இந்தியன் கோப்ரா' என அழைப்பர். இந்த வகை பாம்பை தான் அந்த இளம்பெண் கையில் வைத்திருந்தார். 6 அடி நீளமுள்ள இந்த நாகப்பாம்பு அதன் பின்புறத்தில் மூக்கு கண்ணாடி தோற்றம் இருந்தது.

 

அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பாம்பு சீறும்போது அங்கிருக்கும் ஊழியர்கள் பயத்தில் பின்வாங்கி நின்றனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

 

Next Story

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ‘கோப்ரா’... விக்ரமிற்காக காத்திருக்கும் படக்குழு!

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Cobra movie final shoot update out now

 

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

 

சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் 80 சதவீத காட்சிகளைப் படமாக்கிய படக்குழு, ‘கோப்ரா’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் ரஷ்யா செல்லவுள்ளது. அங்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது நடிகர் விக்ரமின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'மகான்', மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரு படங்களில் நடிகர் விக்ரம் பிசியாக நடித்துவருவதால் ‘கோப்ரா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை என கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் பணிகளை முடித்துவிட்டு இந்த மாத இறுதியில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.