Skip to main content

கேரள வரதட்சணை கொடுமை- கணவருக்கு 10 ஆண்டு சிறை! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Kerala dowry- Husband jailed for 10 years!

 

கேரளாவையே உலுக்கிய வரதட்சணை கொடுமை வழக்கில் இளம்பெண்ணின் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரமன்- சஜிதா தம்பதியின் இளைய மகள் விஸ்மயா. ஆயுர்வேதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற விஸ்மயாவுக்கு 21 வயதில், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் மோட்டார் வாகன உதவி ஆய்வாளர் கிரண்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது, 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூபாய் 10 லட்சம் மதிப்புகள் டொயோட்டோ யாரிஸ் கார் என கிரண்குமாருக்கு விஸ்மயா குடும்பத்தினர் வரதட்சணை கொடுத்துள்ளனர். ஆனால், வரதட்சணை போதாது எனக் கூறி பெரிய சொகுசு கார், அதிகமாக பணம் வேண்டுமென திருமணமான சில நாட்களிலேயே விஸ்மயாவைக் கொடுமைப்படுத்தத் தொடங்கியிருக்கிறார் கிரண்குமார். 

 

தினந்தோறும் அடித்தும், சூடு வைத்தும் துன்புறுத்தியிருக்கிறார் கிரண்குமார். பொறுத்துப் பொறுத்து பார்த்த விஸ்மயா தன் தந்தையின் இயலாமையை எண்ணி திருமணமான ஒரே ஆண்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டுள்ள காயங்கள், துன்புறுத்தல்களை வாட்ஸ் அப் மூலம் உறவினருக்கு அனுப்பியிருக்கிறார். 

 

உறவினர் அழைத்துச் செல்வதாகக் கூறிய, அடுத்த நாளே விஸ்மயா தற்கொலை செய்திருக்கிறார். கேரள மாநில காவல்துறையின் தீவிர விசாரணைக்கு பின்னர், 42 சாட்சிகள், 102 ஆவணங்கள் மூலம் விஸ்மயாவின் தற்கொலைக்கு காரணம், கிரண்குமார் தான் என ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததைத் தொடர்ந்து, அவர் குற்றவாளி என கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

 

இன்று அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி, கிரண்குமாருக்கான தண்டனை இந்த சமுதாயத்திற்கு ஒரு உதாரணமாக இருக்கும் என கூறினார். அதன்படி, கொல்லம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுஜித் தண்டனை விவரங்களை அறிவித்தார். தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் விஸ்மயாவின் கணவர் கிரண்குமாருக்கு சுமார் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு ரூபாய் 12.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.