Skip to main content

இந்தியாவில் மூன்று லட்சத்தைக் கடந்த தினசரி கரோனா பாதிப்பு

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

corona

 

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 2 லட்சத்து 82 ஆயிரத்து 970 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 532 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 491 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 990 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

 

இதற்கிடையே நாட்டில் ஒமிக்ரான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,287ஆக அதிகரித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்