Skip to main content

விமர்சனத்திற்குள்ளான புதுவை முதல்வர் நாராயணசாமியின் மொழிபெயர்ப்பு

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

critique to Chief Minister Narayanasamy's translation

 

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ நேற்று முன்தினம் (16.02.2021) ராஜினாமா செய்துள்ளது அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பிலும் 14 என்ற சமமான எண்ணிக்கையில் தொடர்வதால் பெரும்பான்மையை நிரூபிக்கும் சூழல் நாராயணசாமிக்கு ஏற்படுமா? யாருக்கு ஆட்சி? என புதுச்சேரி அரசியல் படுவேகத்தில் பரபரப்புகளுடன் நகர்ந்து வருகிறது.

 

critique to Chief Minister Narayanasamy's translation

 

இந்நிலையில் நேற்று (17.02.2021) புதுச்சேரி வந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்ட விழாவில், முதல்வர் நாராயணசாமியின் மொழிபெயர்ப்பு விமர்சனத்தைப் பெற்றுள்ளது. நேற்று புதுவை வந்த ராகுல் காந்தி, சோலையூர் என்ற பகுதியில் மக்களைச் சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் நாராயணசாமி ராகுல் காந்திக்கு மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் 'புயல் நேரத்தில் எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை. ஏன் அவர் கூட (முதல்வர் நாராயணசாமி) எங்களை வந்து பார்க்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை' என்று பகிரங்கமாகக் கூறினார். இதனை மொழிபெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறிய முதல்வர் நாராயணசாமி, ''அட் த டைம்.. டூரிங் நிவர் சைக்லோன் டைம்... ஐ கேம் அண்ட் விசிட்டேட் த ஏரியா... அண்ட் கேவ் ரிலீஃப் டு தெம்.. தட் இஸ் ஷி சே'' (புயல் நேரத்தில் நான் அந்த இடங்களைப் பார்வையிட்டேன். நிவாரணங்கள் வழங்கினேன் என அவர் சொல்கிறார்) என மொழிபெயர்த்தார்.

 

ராகுல் காந்திக்கு தமிழ் தெரியாது என நாராயணசாமி இவ்வாறு மாற்றிப் பேசியுள்ளார் என அவரது மொழிபெயர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. அதேபோல் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே குற்றச்சாட்டு வைத்த அந்த மூதாட்டி, தான் வாய்தவறி சொல்லிவிட்டதாக விளக்கமளிக்கும் வீடியோ ஒன்று புதுவை முதல்வர் அலுவகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.