Skip to main content

உயரும் கரோனா... திணரும் இந்தியா!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

j

 

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,491,97ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,16,487 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,774 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதித்த 2,10,936 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,64,626 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 86,575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த மாநிலத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,273 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகப்படியாக இருந்து வருகின்றது. 82,275 பேர் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 45,537 பேர் குணமடைந்த நிலையில் 1,079 பேர் மரணமடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்