
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. பொதுமக்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், காவல்துறையினர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவதும் மராட்டியத்தில் அதிகம் நிகழ்ந்து வருகின்றது. இதுவரை 7,950 காவலர்கள் கரோனாவால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,887 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் மரணமடைந்துள்ளனர். தொற்று காரணமாக மரணமடைந்துள்ள காவலர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது