Skip to main content

ஆற்றில் கட்டி வீசப்பட்ட கல்லூரி மாணவன்... பள்ளி சிறுமியின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் 

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

A college student who was thrown into the river... sensational confession of the school girl's father

 

கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகாவை சேர்ந்த கல்கவடாகி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குரப்பா. இவரது மகள் பள்ளியில் பயின்று வந்த நிலையில் 21 வயதான மல்லு ஜகமண்டி என்ற கல்லூரி மாணவன் அச்சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவன் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், மீட்டுத் தரும்படியும்  குரப்பா  போலீசில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கல்லூரி மாணவனான மல்லு ஜகமண்டியும் குரப்பாவின் மகளான பள்ளி சிறுமியும் காதலித்து வந்த நிலையில் இதற்கு சிறுமியின் தந்தை குரப்பா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். காதலை கைவிடும்படி மகளை பலமுறை எச்சரித்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி காதலியை தேடி வீட்டிற்கு சென்ற மல்லு ஜகமண்டி சிறுமியை சந்தித்து தனிமையில் பேசி இருந்துள்ளார். இதனைப் பார்த்த சிறுமியின் தந்தை அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் மனமுடைந்த சிறுமி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

 

தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து வேதனைப்பட்ட குரப்பா  மல்லுவை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளார். ஆனால் இந்த கொலையை மறைப்பதற்காக தனது மகளும், மாணவன் ஒருவரும் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.

 

மேலும் சிறுமியின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரது சடலங்களையும் மூட்டையாக கட்டி கிருஷ்ணா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்து வந்த மல்லுவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பள்ளி சிறுமியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.