Skip to main content

இந்திய கடற்கரையில் நீலக்கொடி பறக்குமா ?

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். ஸ்வட்ச் பாரத் திட்டம் இந்திய கடற்கரைகளில் தடம்பதிக்கவும் நீலக்கொடிகள் இந்திய கடற்கரைகளில் பறப்பது அவசியம். இந்திய கடற்கரைகளில் நீலக்கொடி பறப்பது என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்? இது என்ன சான்றிதழ் இந்த சான்றிதழ் உலகில் உள்ள சுற்றுலா கடற்கரைகள் எப்படி வாங்கியுள்ளன? இந்திய கடற்கரைகளில் நிலை என்ன என்பது குறித்து சுற்றுச் சூழல் மற்றும் வன ஆர்வலர் மன்னை மனோகரனிடம் இது குறித்து நக்கீரன் இணையத்திற்காக பேசினோம்..
 

blue flag



உலகில் உள்ள சுற்றுலா கடற்கரைகள், தூய்மை மற்றும் இதர சுற்றுச்சூழல் தரநிலைகளை முறையாக பேணிப் பராமரித்தால் நீலக்கொடி தர சான்றிதழ் வழங்கப்படும். 2001 ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் இந்த சான்று வழங்கப்படுகிறது. சுற்றுலா கடற்கரைகளுக்கான உலகின் மிக உயரிய தரச்சான்று இது. இதை கோபன்ஹெகனில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளை 60 நாடுகளின் உள்ள 65 நிறுவனங்கள் அங்கம் வகிக்கும் ஒரு அரசு சார அமைப்பு.

இந்த தரச்சான்றிதழ் பெற சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா செயல்பாடுகளோடு சம்மந்தப்பட்ட தூய்மை, அழகு, அடிப்படை வசதிகள், பராமரிப்பு போன்ற 33 நிபந்தனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். 1985ம்ஆண்டு இந்தத் தரநிலைகள் அந்த அமைப்பு வகுத்தது.

சுற்றுலா சேவைகள் வழங்கும் துறைமுகங்களுக்கும், படகு போக்குவரத்து அமைப்புகளுக்கும் இந்த தரச்சான்று வழங்கப்படுகிறது. இதுவரை 45 நாடுகள் இந்த சான்றுகளை பெற்று இருக்கின்றன. இதுவரை 4560 சான்றுகளை இந்த அமைப்பு வழங்கி இருக்கிறது. ஸ்பெயின் நாடு - 566, கிரீஷ் நாடு - 515, பிரான்ஸ் - 395 என நீலக்கொடி சான்றுகளை வாங்கி குவித்திருக்கின்றன. புவியியல் அமைப்பு, குறைவான மக்கள் தொகை போன்ற காரணங்கள் ஐரோப்பிய கண்டத்து கடற்கரைகளுக்கு சாதகமாக இருக்கின்றன.ஆசிய பிராந்தியத்தில் தென் கொரியா, ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட் கடற்கரைகள் இந்த சான்றிதழ்கள் பெற்றவைகள்.இந்த சான்று ஆண்டுதோரும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சுற்றுலாக் கடற்கரைகள் தரம் உயர்த்தி இந்த தரச்சான்றுகள் பெற சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் கடந்த 2017 ம் ஆண்டு நீலக் கொடித் திட்டம் உருவாக்கியது. இதற்காக தமிழ்நாட்டின் மகாபலிபுரம் கடற்கரை, குஜராத் சிவராஜ்பூர் கடற்கரை, மகாராஷ்ரா போகேவ் கடற்கரை, டையு யுனியன் பிரதேச கோக்லா கடற்கரை, கோவா மியாமர் கடற்கரை, கர்நாடகா காசர்கோடு மற்றும் உடுப்பி படுப்பிட்ரி கடற்கரை, கேரளா கோழிக்கோடு கப்பாடு கடற்கரை, புதுச்சேரி ஈடன் கடற்கரை, ஆந்திரவின் விசாகப்பட்டினம் ருசிகோண்டா கடற்கரை, ஒடிசா மாநில கோல்டன் மற்றும் கொணரக் கடற்கரைகள், அந்தமான் நிக்கோபார் என 12 கடற்கரைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.


இந்திய ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மைக்கான அமைப்புசான்று பெற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நடப்பு 2019 ம் ஆண்டு குஜராத்தின் சிவராஜ்பூர், டையு யுனியன் பிரதேச கோக்லா என இரண்டு இந்திய கடற்கரைகள் சான்றுக்கு விண்ணப்பித்து இருக்கின்றன. வரும் அக்டோபர் மாதம் முடிவு தெரியும்.

தரச்சான்று பெற ஏதுவாக மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் சுற்றுப்புற பாதுகாப்பு சட்டம்- 1986 விதிகளின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள், இடம் பெயர்க்கும் வகையிலான சிறிய அளவு திடக்கழிவு, மற்றும் மாசுநீர் மறுசுழற்ச்சி ஆலைகள், சூரிய மின்தகடு ஒளி விளக்குகள் போன்ற வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான அரசானை கடந்த 12 ஜீலை 2019 மத்திய அரசிதழில் (கெசட்) வெளியானது. நீலக்கொடி திட்டம் நிறைவேறுவது மாநில அரசுகளின் ஒத்துழைப்புகளை பொருத்தது.

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும். ஸ்வட்ச் பாரத் திட்டம் இந்திய கடற்கரைகளில் தடம்பதிக்கவும் நீலக்கொடிகள் இந்திய கடற்கரைகளில் பறப்பது அவசியம் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அனுமன் கொடி அகற்றம்; பதற்றத்தில் கர்நாடகா!

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Karnataka in tension on Removal of Hanuman flag

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கிராம் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் 108 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைத்து, அதில் அனுமன் கொடி ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கிராம பஞ்சாயத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், தேசியக் கொடியைத் தவிர, எந்த மத, அரசியல் கொடியையும் ஏற்றக்கூடாது என்று கூறி கிராமப் பஞ்சாயத்து அந்த கோரிக்கை நிராகரித்தது.

இருப்பினும், அந்த கிராம மக்கள் சிலரும், இந்து அமைப்பினரும் சேர்ந்து, அந்த அரசு நிலத்தில் கொடிக் கம்பம் அமைத்து அதில் அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர். இதையறிந்த, மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் அனுமன் கொடியை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் நேற்று (28-01-24) அந்த கிராமத்திற்குச் சென்றனர். அப்போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். 

இருப்பினும், போராட்டம் கலையாததால் போலீசார் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். அதன் பின்னர், அங்கு இருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு அதிகாரிகள் தேசியக்கொடியை ஏற்றினர். இதற்கு இந்து அமைப்பினரும், கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் உருவாகி வருகிறது. 

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “தேசியக்கொடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது தற்செயலாக நடந்தது அல்ல. வேண்டுமென்றே விதிகளை மீறி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பா.ஜ.க மற்றும் சங்பரிவார்களின் முன் கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் தான். கர்நாடகா மக்களை மாநில அரசுக்கு எதிராகத் திருப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு திட்டமிட்டு போராட்டம் நடத்துகின்றனர்” என்று கூறினார்.