Skip to main content

முடிவுக்கு வந்த மற்றொரு 90ஸ் கிட்ஸ் ஃபேவரைட்... கடைசி தொழிற்சாலையையும் மூடியது அட்லஸ்...

Published on 05/06/2020 | Edited on 05/06/2020

 

atlas cycles closed its last factory

 

90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அட்லஸ் சைக்கிள், இந்த சைக்கிள் தொழிற்சாலை, தற்போது தனது கடைசி தொழிற்சாலையையும்  மூடியுள்ளது. 


சுமார் 70 ஆண்டுகளாக சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம், சைக்கிள் விற்பனை குறைவு, தற்போதைய வணிக சூழல் உள்ளிட்டவற்றால் தனது கடைசி உற்பத்தி ஆலையையும் மூடியுள்ளது. ஹரியானாவின் சோனிபேட் என்ற இடத்தில் 1951ம் ஆண்டு தொடங்கப்பட்ட அட்லஸ் நிறுவனம் 90 களின் மத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது. சொல்லப்போனால் இன்றைய 90ஸ் கிட்ஸ் அனைவருமே ஒரு அட்லஸ் சைக்கிளாவது வைத்திருந்திருப்பார்கள் எனலாம்.

 

 


இப்படி பிரபலமாக இருந்த அட்லஸ் நிறுவனம் இருசக்கர வாகனங்களின் வரத்துக் காரணமாக 2000 மாவது ஆண்டுக்குப் பின்னர் சரிய ஆரம்பித்தது. இதனையடுத்து, 2014ம் ஆண்டு மலன்பூரில் உள்ள தொழிற்சாலையையும், 2018ல் சோனிபேட்டில் உள்ள தொழிற்சாலையையும் அந்நிறுவனம் மூடியது. இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஷாகிபாபாத்தில் இயங்கி வந்த கடைசி ஆலையும் உலக சைக்கிள் தினமான நேற்று திடீரென மூடப்பட்டது. ஆனால், இந்த தொழிற்சாலை மூடப்படுவது குறித்து எந்த முன்னறிவிப்பும் செய்யப்படாததால், திடீரென வேலையிழந்த சுமார் 1000 தொழிலாளர்கள், நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக தொழிற்சாலை மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோரிக்கை வைத்த மாணவி; நிறைவேற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

cycling student request udhayanidhi stalin gives cycle covai student

 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஷா. தபித்தா சைக்கிளிங் வீராங்கனை  ஆவார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் (Track) வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் 07.01.2023 முதல் 10.01.2023 வரை நடைபெற்ற 27வது தேசிய அளவிலான மிக இளையோர் (மகளிர்) சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

 

தேசிய அளவில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று, தற்போது நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்சல்லேன்ஸ் (NCOE - National Centre of Excellence) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் ஷா. தபித்தா பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு ஏதுவாக போட்டிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மிதிவண்டி வழங்கினால் பல்வேறு சாதனைகளை படைத்து நமது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முடியும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

இந்நிலையில் அவரது கோரிக்கையினை பரிசீலித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  மிதிவண்டி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் தபித்தா கேட்டுக்கொண்டபடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 13.99 லட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாதரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

சைக்கிளில் சென்ற முதியவர் மீது லோடு வாகனம் மோதி விபத்து

Published on 13/09/2022 | Edited on 13/09/2022

 

cycle and load van incident police investigation chennai

 

சென்னை தாம்பரம் அருகே சைக்கிளில் சென்ற முதியவர் மீது லோடு வாகனம் மோதியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

 

பரணிபுத்தூர் சாலையில் ஐயாத்துரை என்பவர், தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, லோடு வாகனம் அவரை கடக்க முயன்ற போது, சைக்கிள் மீது மோதியதால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட முதியவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

 

பைபாஸ் சாலையில் மின் வசதிகள் இல்லாததால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.