Skip to main content

மரணம் வரை நீங்காத காதலும், எளிமையும் திமுக எம்.எல்.ஏ.வின் கதை!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

முருகப்பெருமானின் அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் காத்தவராயன். காமாட்சி அம்மன் கோயில்களில் காத்தவராயன் சிலை இருக்கும், அதனை வணங்கியபின்பே காமாட்சியம்மனை வணங்குவார்கள் ஆன்மீகம் அறிந்தவர்கள். தமிழகத்தின் மைய மாவட்டங்களில் எல்லை தெய்வமாக வணங்கப்படுகிறார் காத்தவராயன். அதற்கு காரணம் இலக்கிய காத்தவராயனுக்கும் காதல் இருந்தது. அந்த காதல் கைகூடாமல் அவன் மரணத்தை தழுவினான். 7 ஜென்மத்திலும் அப்படி வாழ்ந்தான், 7வது ஜென்மத்தில் காத்தவராயனாக பிறந்து எல்லை காவல் வீராக இருந்து காதல் கைகூடாமலே கழுமரம் ஏற்றப்பட்டு மரணத்தை தழுவியதால் ஒரு சாரார் காத்தவராயனை இன்றும் கடவுளாகவே வணங்குகின்றனர். அந்த காத்தவராயன் வரிசையில் இந்த காத்தவராயனும் காதல் கைகூடாமல் காற்றில் கரைந்துள்ளார்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் தனி தொகுதி. 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பூசலில் தினகரன் அணியில் இணைந்தார் ஜெயந்தி. இதனால் இவரோடு சேர்த்து 18 எம்.எல்.ஏக்கள் பதவிகள் பறிக்கப்பட்டது. 18 தொகுதிகளில் காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 2019 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு நடைபெற்றது.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT


இந்த இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த காத்தவராயன் வெற்றி பெற்றார். திமுகவில் கிளை செயலாளர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட துணை செயலாளர் என படிப்படியாக கட்சியில் வளர்ந்தார். கட்சியின் பல்வேறு போராட்டத்தில் கலந்துக்கொண்டு சிறைக்கு சென்றவர். சேர்மன், எம்.எல்.ஏ என பதவிக்கு வருவதற்கு முன்பே ஊர் மக்களின் பிரச்சனையென்றால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுவார்.


சலவை தொழிலாளியாக இருந்த இவருக்கு வாலிப வயதில் ஒரு காதல் இருந்தது. உயர் படிப்பு படித்த அந்த பெண்ணும் இவரை காதலித்தார். அந்த காதல் காற்றில் கரைந்துவிட்டது. காதல் நினைவுகள் இதயத்தில் இருந்ததால், வேறு ஒரு பெண் இணையாக வேண்டாம் என திருமணம் செய்துக்கொள்ளாமல் தனது சகோதரின் குடும்பத்தாருடன் பேரணாம்பட்டில் வசித்து வந்தார்.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT

பேரணாம்பட்டு நகரத்தில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிருஸ்த்துவர்கள் வசிக்கின்றனர். அந்த நகராட்சியில் 2011 முதல் 2016 வரை நகரமன்ற தலைவராக வெற்றி பெற்று பதவியில் இருந்தார். 2016ல் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ சீட் கேட்டபோது கிடைக்கவில்லை. 2019 இடைத்தேர்தலின்போது சீட் கேட்டார். ஆனால் இவருக்கு உட்கட்சியிலேயே சிலர் எதிர்ப்பு கிளப்பினார்கள். அந்த நேரத்தில், நகராட்சி தலைவராக இருந்து சிறுபான்மை மக்களின் நல்மதிப்பை பெற்றுயிருந்ததால், இஸ்லாமிய பிரமுகர்களே காத்தவராயனுக்கு எம்.எல்.ஏ சீட் தாருங்கள் என திமுக தலைமையிடம் சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.


குடியாத்தம் தொகுதி அதிமுகவினரே தங்களது வேட்பாளர் கஸ்பா.மூர்த்தியை புறக்கணித்து காத்தவராயனை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுயிருந்தார். எம்.எல்.ஏ தேர்தலில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏவான பின்பும் எந்த பந்தாவும் இருந்ததில்லை. இப்போதும், இவரது வீடு ஓலை வீடு தான். சரியாக 9 மாதம் மட்டும்மே எல்.எல்.ஏவாக இருந்தார்.


சில வருடங்களாக அவருக்கு இருதய நோய் இருந்துவந்தது. அதற்கான சிகிச்சையை சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு அவருக்கு உடல்நிலை அதிகம் பாதிக்கப்பட அதன் பின்பே அப்போலோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னேற்றப்பாதையில் சென்ற அவரது உடல் பின்னர் பின்னடைவை சந்தித்தது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்க்கு தகவல் சொல்லப்பட்டது. அவர் கட்சி முன்னோடிகளுடன் சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 28ந்தேதி காலை 08.00 மணியளவில் மரணமடைந்தார்.


இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2011ல் திருச்சி தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் தரப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். மற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்புக்காக திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும்போது, பாடலூரில் வாகன விபத்தில் இறந்துப்போனார். சட்டமன்றம் செல்லாமலேயே மரணத்தை தழுவியவர் மரியம்பிச்சை எம்.எல்.ஏ. 2016ல் மதுரை திருமங்களம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சீனிவேலு, வாக்கு எண்ணிக்கையின் போது மறைந்தார். அதன்பின்னர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக போஸ், ஒரு வருடத்துக்குள் இறந்தார். அதற்கடுத்து எம்.எல்.ஏவாகி சில மாதங்களிலேயே இறந்தது காத்தவராயன் தான் என்கிறார்கள்.

VELLORE DISTRICT gudiyattam DMK MLA INCIDENT

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களுக்கு மாத சம்பளம் 1.05 லட்சம் மற்றும் இதர படிகள் உள்ளன. முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்தியம் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சம்மந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ இறந்துவிட்டால் அவரது மனைவிக்கு ஓய்வூதியமாக 10 ஆயிரம் ரூபாய் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்து ஓய்வு பெற்றால் தான் முழு ஓய்வூதியம் பெற ஒரு எம்.எல்.ஏ தகுதி உடையவராக மாறுகிறார். 9 மாதமே எம்.எல்.ஏவாக இருந்த காத்தவராயன் மறைந்துள்ளார். அவருக்கு குடும்பமும் கிடையாது. அவரது சகோதரர் குடும்பத்தை வாரிசாக குறிப்பிட்டுள்ளார் எனக்கூறப்படுகிறது. அந்த குடும்பத்துக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.


இதுப்பற்றி சட்டமன்ற செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, புதுக்கோட்டை தொகுதியின் எம்.எல்.ஏவாக 2011ல் இருந்தவர் முத்துக்குமரன். அப்போது அதிமுக கூட்டணியில் சிபிஐ இருந்தது. சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பி, ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவர். அவர் வெற்றி பெற்று ஓராண்டுக்குள் இறந்துவிட்டார். அவரின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பது ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின், குடும்பத்துக்கான ஓய்வூதியம் வழங்கும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு வரை எம்.எல்.ஏவாக வெற்றி பெறுபவர் 3 ஆண்டுகளை கடந்தால் மட்டும்மே ஓய்வூதியம் வழங்கும் வகையில் விதிகள் இருந்தது. இந்த விதியை திருத்தி அதாவது  ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்று கையெழுத்திட்ட நிமிடத்தில் இருந்து அவர் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு தகுதியானவராக மாறிவிடும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

2012 முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் இறந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பதவியை ராஜினாமா செய்தாலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை கிடைக்கும். இதுப்பற்றி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களுக்கும் தற்போது மாதாந்திர உதவித்தொகை கிடைத்து வருகிறது என்றார். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசுக்கு உதவித்தொகை கிடைக்கும். எம்.எல்.ஏ காத்தவராயன் இறந்துவிட்டார், அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில் அவரது அண்ணன் குடும்பத்தார்க்கு கிடைக்க வழியுண்டு என்றார்கள்.

 

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.