Skip to main content

வானளாவிய அதிகாரம்! சட்டமன்றத்தில் காட்டிய பி.எச்.பாண்டியன்!

Published on 04/01/2020 | Edited on 07/01/2020

 

பால் ஹெக்டர் பாண்டியன் என்கிற பி.எச்.பாண்டியன் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. காலத்தில் வானளாவிய அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தவர். ஆரம்ப காலங்களில் தன் சட்டப்படிப்பின் மூலம் பல வழக்குகளை வெற்றி பெற வைத்த அவரது ஆணித்தரமான வார்த்தைகளும், யாருக்கும் அஞ்சா தைரியமுமே அவரை அ.தி.மு.க. 1972 அக் 17ல் எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்தில் அவரிடம் அறிமுகம் கொள்ள வைத்தது. நெல்லை மாவட்டத்தின் சேரன்மகாதேவியிலுள்ள கோவிந்தப்பேரியில் தன்னுடைய தோட்டத்துடன் கூடிய வீட்டில் குடியிருந்து வருபவர் பி.எச்.பாண்டியன்.

 

P. H. Pandian



எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 1977ல் நடத்த தேர்தலில் முதலாக எம்.ஜி.ஆரின் தலைமையில் சேரன்மகாதேவி எம்.எல்.ஏ.வானார். தனது எம்.எல்.ஏ. காலத்தில் தொகுதிக்கு, தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டியதை முறையாகச் செய்து ஒரு எம்.எல்.ஏ.வின் மக்கள் கடமை இது தான் என உணர்த்தியவர். தொகுதியை மேம்பட்ட நகரமாக்கியதோடு கன்னடியன் கால்வாய் பாலம், மக்கள் நலன் பொருட்டு திருமணமண்டபம் போன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்து அசைக்க முடியாத சக்தியானார். பி.எச்.பாண்டியனின் தைரியம் போர்க்குணம் காரணமாகவே எம்.ஜி.ஆர். அவரை தன் அமைச்சரவையின் சபாநாயகராக்கினார். சபைக்கு நடு நாயகமாகவே செயல்பட்டவர் பாண்டியன். அது சமயம் கலைஞர் எதிர்க் கட்சித் தலைவர். அப்போது எம்.ஜி.ஆரின் சொல் கேட்டு சபா. பி.எச்.பாண்டியன் தி.மு.க.வின் பத்து எம்.எல்.ஏ.க்களை சபையிலிருந்து நீக்கினார். அது சமயம் சபையில் பெரும் கொந்தளிப்பு. அவைகளைச் சமாளித்த சபா.பாண்டியன், இந்த சட்டசபை சபாநாயகரான எனது கட்டுப்பாட்டில் உள்ளது. சபா நாயகருக்கு வானளாவிய அதிகாரம் (ஸ்கை ஹை பவர்) உள்ளது. நான் நீக்கியது நீக்கியது தான். சபா நாயகரின் நடடிவக்கையை நாட்டின் எந்த நீதி மன்றமும் கட்டுப்படுத்த முடியாது என்று எம்.ஜி.ஆர். உட்பட சட்டசபையே வியக்கு மளவுக்கு சட்ட நுணுக்கங்களை முன்னே வைத்தார். 
 

Paul Hector Pandian


 

பி.எச்.பாண்டியனின் இந்த வாதமும், அவரின் நுணுக்கமான சட்டப்பிரிவுகளுமே ஒரு சபாநாயகருக்கு எத்தகைய அதிகாரம் உள்ளது. என்பதை வெளி உலகிற்கு உணர்த்தியது. அந்தப் பெருமையைக் கொண்டவர் பாண்டியன். தி.மு.க. தலைவர் கலைஞடன் கொள்கையில் முரண்பாடிருந்தலும், அவருடன் போனில் பேசுமளவுக்கு நட்பும் கொண்டவர் பாண்டியன். எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின் ஜெ. அணி, ஜானகி அணி என அ.தி.மு.க. இரண்டு அணியானது. அப்போதைய தேர்தலில் ஜானகி அணியில் வென்ற ஒரே எம்.எல்.ஏ. பி.எச்.பாண்டியன். அதுவும் தனது மக்கள் நலத்திட்டம் காரணமாகவே அவர் 2ம் முறை எம்.எல்.ஏ.வாக முடிந்தது. அதன் பின் அணிப் பக்கம் வந்த பாண்டியன் அவரின் முதல் நெல்லை எம்.பி.யானார் நெல்லை எம்.பி. தொகுதி முழுக்க நலத்திட்டங்களைப் பழுதில்லாமல் செய்தவர். பின்பு ‘ஜெ’வுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு நெல்லை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.


 

 

சற்று காலத்திற்குப் பிறகு ‘ஜெ’ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். எதையும் தைரியமாகவே பேசும் குணம் கொண்ட பி.எச்.பாண்டியன், ‘ஜெ’வின் நம்பிக்கைக்குரியவரானார். அதனாலேயே 2004ல் அவரின் மனைவி சிந்தியா பாண்டியனை நெல்லை எம்.பி. வேட்பாளராக்கினார் ஜெ. ஆனால் வெற்றி வாய்ப்பு கிட்டவில்லை. இதையடுத்துசிந்தியாபாண்டியன் நெல்லை மனோண்மணியம் சுந்ததனார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக்கினார் ‘ஜெ’.


 

 

‘ஜெ’.மறைவிற்குப் பின்பு ஊடகங்களை அழைத்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா சிகிச்சையில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது ஓ.பி.எஸ். தலைமையிலான ஒரு அணி உருவானபோது, அந்த அணியில் இணைந்து கட்சி தொடர்பாக பல காரியங்களை முன்னெடுக்க உதவியவர் பி.எச்.பாண்டியன்.
 

பல்வேறு முரண்பாடிருந்தாலும் அ.தி.மு.க.விற்கு சில விஷயங்களை உணர்த்திய பாண்டியனின் மனைவி சிந்தியாபாண்டியன் 2016ல் மறைந்தார். அட்வகேட் ஜெனரல் அரவிந்த பாண்டியன், எக்ஸ் எம்.பி. மனோஜ்பாண்டியன், டாக்டரான நவீன் பாண்டியன், வினோத்பாண்டியன் என நான்கு மகன்கள், டாக்டர் தேவமணி என்ற மகளும் உள்ளனர்.

 

Newstuff



 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.