Skip to main content

முதல்வரியில் பாராட்டு, மற்றதெல்லாம் கிழி... கிழி!!!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

சமீப சில நாட்களாக நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசுகிற தமிழக எம்.பி.க்கள் ஆ.ராசா, தொல்.திருமா, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு என்று மட்டும் சில செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
 

o chidambaram nirmala sitharaman


இது நிர்மலா சீதாராமன் தயாரித்த பட்ஜெட்டுக்கு பாராட்டு என்பைதப் போல அர்த்தமாகிறது. ஆனால், நிஜம் என்னவென்றால், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டை தமிழக எம்.பி.க்கள் அக்குவேறு ஆணிவேறாக கிழித்தெறிகிறார்கள். மொத்த வரவு எவ்வளவு? மொத்த செலவு எவ்வளவு? பற்றாக்குறை எவ்வளவு? எந்தெந்த வகையில் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டிருக்கிறது? என்கிற விவரமெல்லாம் குறிப்பிடாமல் வெறுமனே ஒரு பளபளப்பான அறிக்கையைப் போல பட்ஜெட் இருக்கிறது என்பதே பேசிய எம்.பி.க்கள் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

கார்பரேட்டுகளுக்கு சாதகமான இந்த பட்ஜெட்டில், ஏழை மாணவர்களுக்காகவோ, விவசாயிகளுக்காகவோ என்ன செய்யப்போகிறோம் என்ற விவரமே இல்லை என்றும், வேலை வாய்ப்புகளுக்காக என்ன செய்திருக்கிறோம்? வருவாய்க்காக என்ன செய்திருக்கிறோம், ஏற்கெனவே இருக்கிற 100 நாள் வேலைவாயப்புக்கும், கல்விக்கும் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு ஏன் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் இல்லையே என்றெல்லாம் கிழித்து தொங்கவிடுகிறார்கள்.

திருமா தனது உரையில் ஒரே கிராமத்தை இரண்டு கிராமமாக ஆக்கி வைத்திருக்கிற நடைமுறையை மாற்ற இந்த பட்ஜெட் என்ன செய்திருக்கிறது? ஒரே ஊரில் ஊர்ப்பகுதி மக்களுக்கு ஒரு சுடுகாடு என்றும் தலித் மக்களுக்கு ஒரு சுடுகாடு என்றும் ஆக்கி வைத்திருப்பதை மாற்ற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று கேட்டார். அதையெல்லாம் விட்டுவிட்டு, முதன்முதலில் ஒரு பெண் நிதியமைச்சர் ஆகியிருக்கிறார் என்பதற்காக அவரை சில வார்த்தைகள் பாராட்டினால், அதையே தலைப்பாக்கி போடுவது எப்படி சரியாக இருக்கும்? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.