Skip to main content

மத்திய தொழில் துறையில் இல்லாத கவுன்சிலுக்கு நமீதாவின் கணவர் தலைவர்! 

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Namitha's husband is the head of the non-central industry council!

 

கவர்ச்சிப் புயல் நடிகை நமீதா. இவர் குஷ்புவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்டும் அளவிற்கு திகழ்ந்தவர். ‘மச்சான்ஸ்’ என்ற ஒரே வார்த்தையில் ரசிகர்களை செல்லமாகக் கொஞ்சிக் குலாவி அழைப்பார்.

 

வட இந்தியாவிலிருந்து பா.ஜ.க.வின் பொறுப்பாளர்கள் யார் வந்தாலும், கூட்டணி குறித்து முடிவு செய்யும் மாநில செயற்குழுக் கூட்டமே என்றாலும் அங்கே நமீதா முன்னணியில் இருப்பார். நமீதாவின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேசவ விநாயகமே முன்னின்று நடத்துவார். பா.ஜ.க.வின் மாநில செய்தித் தொடர்பாளர் ரங்கநாயக்கலு மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன் ஆகியோரும் நமீதாவின் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைப்பார்கள்.

 

சமீபத்தில் சென்னையில் கிரவுன் பிளாசா என்கிற நட்சத்திர ஹோட்டலில் நமீதாவும் அவரது கணவரும் தொழிலதிபர்கள் சந்திக்கும் ஒரு ‘சந்திப்பு’ விழாவை நடத்தினார்கள். அண்ணாமலை, அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் ஆசியுடன் கேசவ விநாயகம், கரு.நாகராஜன் வழிகாட்டுதல்களுடன் நமீதா, அவரது கணவர் சௌத்ரி, ரங்கநாயக்கலு முன்னிலையில் உசிலம்பட்டி முத்துராமன் என்பவர் நூறு கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறார். இவர்கள் அனைவரும் அந்த கோடிக்கணக்கான பணத்தை பங்குபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாராக மாறியிருக்கிறது.

 

சேலம் ஜாகீர் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் சேலம் இரும்பாலை பிரதான சாலையில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளார். அம்மனுவில், “எனது நண்பர் வாயிலாக உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் பழக்கமானார். சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் அகில இந்தியத் தலைவர் என மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் பேசினார்.

 

அவர் அந்த விழாவுக்கு வந்த காரில் தேசியக்கொடியுடன், சேர்மன் ஆப் இண்டியா M.S.M.E NATIONAL PROMOTION COUNCIL என போடப்பட்டிருந்தது. அவர் அந்த விழாவில் M.S.M.E நிறுவனங்களிடம் உங்களுக்கு லோன் வாங்கித் தருகிறேன் எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று பேசினார். அவருடன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ், நடிகை நமீதா, அவரது கணவர் சௌத்ரி, பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு. நாகராஜன், ரங்கநாயக்கலு ஆகியோர் வந்திருந்தனர்.

 

Namitha's husband is the head of the non-central industry council!

 

தமிழகம் முழுவதும் M.S.M.E தொழில் வளர்ச்சி மைய கவுன்சிலின் சார்பில் லோன் வாங்கித் தருவது, ஏற்றுமதியை ஊக்குவிப்பது என ஒரு பெரிய வளர்ச்சித் திட்டம் உள்ளது. அதில் இதுவரை நூறுகோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருக்கிறது. முத்துராமன் எனக்கு M.S.M.E NATIONAL PROMOTION COUNCILல் தமிழகத் தலைவராக பதவி வாங்கித் தருகிறேன், அதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு மூன்றரைக் கோடி ரூபாய் தர வேண்டும் என்றார். அட்வான்சாக ஐம்பது லட்சம் ரூபாய் கேட்டார். அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர் எனக்கு தலைவர் பதவியைப் பெற்றுத் தரவில்லை. ஏன் தரவில்லை என்று கேட்டபோது, நடிகை நமீதாவின் கணவர் சௌத்ரிக்கு அந்த தலைவர் பதவியைக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார். என் பணத்தைத் திருப்பிக் கேட்டபோது ஒன்பது லட்சத்தைக் கொடுத்துவிட்டு மீதி 41 லட்சத்தை ஒரு மாதத்தில் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

 

போலீசார் முத்துராமன், துஷ்யந்த் யாதவ், நமீதா, அவரது கணவர் சௌத்ரி ஆகியோரை விசாரித்தனர். இப்படி ஒரு கவுன்சில் மத்திய அரசில் இல்லை என மத்திய தொழில்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்த விளக்கத்தோடு விசாரணை ஆரம்பமானது. கிரவுன் பிளாசா ஹோட்டலில் நடந்த சந்திப்பு, அதில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு, தமிழ்நாடு முழுவதும் சேலம் கோபால்சாமியைப் போல பலர் ஏமாற்றப்பட்ட நிகழ்வுகள், நடிகை நமீதாவும் அவரது கணவரும் பா.ஜ.க. நிர்வாகிகளும் சேர்ந்து செய்த நூறுகோடி மோசடி, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆசியுடன் நடைபெற்ற இந்த மோசடியின் பின்னணி ஆகியவை தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

 

அதில், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை நமீதாவோ, “என்னையும் ஏமாற்றிவிட்டார்கள் என்று ஒப்பாரி வைத்து அழுததோடு, எனக்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று கதறினார். அதனால், நமீதாவை தற்சமயம் விட்டு வைத்திருக்கும் போலீஸ், இந்த நூறுகோடி ரூபாய் மோசடியில் நமீதா, அவரது கணவர் சௌத்ரி, அண்ணாமலை, கரு. நாகராஜன், மீடியா பொறுப்பாளர் ரங்கநாயக்கலு, அமர்பிரசாத் ரெட்டி போன்ற பா.ஜ.க. தலைவர்களின் தொடர்புகளைப் பற்றியும் விசாரித்து வருகிறார்கள்.

 

 

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.