Skip to main content

எங்கள் கூட்டத்திற்குத் தடை... பன்னீர் கூட்டத்திற்கு அனுமதி - ஸ்டாலின் காட்டம்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


கரோனா தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு வீடியோ வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது, "கரோனா சம்பந்தமாக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு நிறைவேற்றப்பட்டுள்ளது. முதலாவதாக இந்த கரோனா நோயின் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா நோயில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்வதில் தேவையற்ற கால தாமதம் இருக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். மேலும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு நிதியாக 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
 

 

 

h



மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய கூடாது என்ற நோக்கில் தடை போட்டார்கள். அதை எதிர்த்து எங்களுடைய வழக்கறிஞர் வில்சன் அவர்கள் மூலமாக ஆலந்தூர் பாரதி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அதை விசாரித்த நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், உதவி வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த வேண்டும் என்று அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகவும் ஒரு தீர்மானம் நிறைமேற்றி உள்ளோம். உதவ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வலுசேர்ந்த இந்த உயர்நீதமன்ற உத்தரவைச் செயல்படுத்த இந்த அரசு முயல வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தக் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய கூட்டம். ஆனால் இந்தக் கூட்டம் நடைபெறக் கூடாது என்பதற்காக காவல்துறை மூலம் ஒரு அறிக்கையின் மூலமாகத் தடை செய்தார்கள். 

அந்தத் தடையை மீறி எங்களால் அந்தக் கூட்டத்தை நடத்தியிருக்க முடியும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து காணொளி காட்சி மூலம் இன்று நடத்தியிருக்கிறோம். அதற்கு காவல்துறை தரப்பில் என்ன சொன்னார்கள் என்றால், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று அதற்கு காரணமாக எங்களிடம் கூறினார்கள். நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு இன்றைக்கு காணொளி காட்சி மூலம் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம். ஆனால் நேற்றைய தினம் துணை முதல்வர் அவரின் துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார். சட்டத்துறை அமைச்சர் சண்முகம் விழுப்புரத்தில் அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார். இவை எல்லாம் செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. ஒரு 11 கட்சி தலைவர்களை இணைந்து கூட்டம் நடத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு இவர்கள் எவ்வாறு கூட்டம் நடத்துகிறார்கள். இதில் இருந்தே இவர்களின் அப்பட்டமான விதிமீறல்கள் நமக்குத் தெரிய வருகின்றது. இந்தத் தீர்மானங்களை இந்த அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.