Skip to main content

நீதிபதி நினைத்திருந்தால் அவர்கள் இருவரையும் காப்பாற்றி இருக்க முடியுமா..? - வழக்கறிஞர் இளங்கோவன் பேட்டி!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020
v

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாக சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வழக்கறிஞர் இளங்கோவன் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கையை அனைவரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருக்கு சிறை செல்ல அனுமதி அளித்த மாஜிஸ்திரேட் அனைவரின் கவனத்துக்கும் வருகின்றார். அவர் நினைத்திருந்தால் இறப்பை தடுக்க முடியவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் சிறை செல்வதை தடுத்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

சட்டம் அவர்களுக்கு எல்லா விதமான அதிகாரங்களையும் வழங்குகின்றது. தாங்கள் அந்த இடத்தில் இருப்பதால் தனக்கு எல்லா விதமான அதிகாரங்களும் இருக்கின்றது என்று அவர்கள் நினைத்துக்கொள்ளக்கூடாது. இந்த அறிவு முதலில் அவர்களுக்கு புகுத்தப்பட வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய காவல்துறை அப்படியான ஒரு நிலையில் இல்லை என்பதை பல ஆண்டுகளாக நாம் பார்த்து வருகின்றோம். இந்த நிகழ்வு முதலில் எப்படி ஏற்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இரவு எட்டு மணி வரை மட்டுமே கடை திறந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கடை அதற்கு மேலும் திறந்திருந்தால் அவர்கள் செய்ய வேண்டியது என்ன, எதற்காக வழக்கு பதிவு செய்ய முயல்கின்றார்கள். பல்வேறு விதி மீறல்களை இவர்கள் ஆரம்பித்திலேயே செய்து விடுகிறார்கள். 

ஒரு எஸ்ஐ புகார் கொடுக்க மற்றொருவர் அதனை பதிவு செய்கின்றார். இவர்கள் கடை அதிகம் நேரம் திறந்திருந்தால்கூட ஒரு பொதுவான மனிதர்களை வைத்து புகாரை பதிவு செய்து இருக்கலாம். ஆனால் அதைகூட காவல்துறையினர் செய்யவில்லை. அனுபவம் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்படி ஒரு முதல் தகவல் அறிக்கை தேவையில்லை என்று. தேவையில்லாதவற்றை அனைத்தையும் அவர்கள் அந்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் கைது செய்துவிடுவார்கள் என்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்த பார்க்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை கிடைக்கும் வழக்குகளில் ஒருவர் கைது செய்யப்பட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தால் கூட உடனடி கைது என்பது அவசியமில்லை. 

அவ்வாறு கைது செய்யப்பட வேண்டும் என்றால், அந்த கைதை செய்யக்கூடியவர் அதற்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும். இந்த கைது அவசியமானதுதான் என்று அவர்களை விசாரணை செய்த அதிகாரி இதுவரை வெளியே சொன்னாரா என்று இதுவரை தெரியவில்லை. ஒருவரை கைது செய்தால் இரண்டு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படும். ஒன்று கைது செய்து பிணையில் விடுவிக்கப்படுவார்கள். மற்றொன்று நீதிபதி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நீதிமன்ற காவலில் வைப்பார். அதில் விசாரணை கைதிக்கு ஏதேனும் பாதிப்போ, உயிரிழப்போ ஏற்பட்டால் முதலில் நீதிபதிதான் பதில் சொல்ல வேண்டும். சிறைச்சாலை அரசாங்கத்தின் ஒரு இடமாக இருந்தாலும் அதன் முழு கண்ட்ரோல் நீதிபதியிடம் இருக்கும், இந்த விசாரணை கைதிகளை பொறுத்த வரையில். அப்படி இருக்கையில் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடைபெறுகின்றது என்றால் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவது அவசியமாகின்றது.

 

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.