Skip to main content

'ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமல்ல... ஆப்கானிஸ்தானை கூட மீட்பார்கள்' வழக்கறிஞர் அருள்மொழி தடாலடி!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019


காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நீக்கியது. இதற்கு பெரும்பாலான எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி இருப்பதால் பாஜக அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதுதொடர்பாக வழக்கறிஞர் அருள்மொழியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். அனைத்து கேள்விகளுக்கும் அவர் அதிரடியாக பதிலளித்தார். அவை வருமாறு,
 

arulmozhi




காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒருபகுதியாக காஷ்மீர் இருந்துகொண்டு அதற்கு தனிச்சலுகை வழங்கப்படுவதில் நியாயம் இல்லை என்று, இதற்கான காரணமாக இந்த விவகாரத்தை ஆதரிப்பவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதை எப்படி பார்கிறீர்கள்?

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை என்று சொல்லப்படுவதே தவறு. அவர்கள் இந்தியாவுடன் இணைந்து கொள்வதற்கு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி. இந்தியாவுடன் சேர்வதற்கு அவர்கள் விதித்த நிபந்தனைகளில் இது முக்கியமான ஒன்று. இப்போது அதை நீக்கி இருக்கிறார்கள். இதை யார் செய்ய வேண்டும். நாங்கள் இவ்வாறு மாற்ற இருக்கிறோம் என்று அந்த மக்களிடம் தெரிவித்து கருத்து கேட்டீர்களா? அந்த மாநிலத்தில் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறதா? அந்த மக்களிடம் இதை பற்றி தெரிவிக்காமலேயே உங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா.

இந்த சிறப்பு சலுகை தற்காலிகமாக வழங்கப்பட்ட ஒன்றுதான் என்று இதனை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்ளே?

அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அதை யார் செய்ய வேண்டும். அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுகூடி சட்டமன்றத்தில் முடிவெடுக்க கூடிய விஷயம் இது. ஆனால், மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை தற்போது இல்லாத நிலையில், மாநில மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த முடிவை மத்திய அரசாங்கம் எடுத்துள்ளது. இது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாகவே நான் இதை பார்கிறேன்.

இப்போது அங்கு யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற நிலையில், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி காஷ்மீர் இளைஞர்கள் வேலை வாய்ப்பை அதிகம் பெருவார்கள் என்று கூறப்படுகிறதே?
 

அவர்கள் கேட்டார்களா? மக்கள் என்ன கேட்கிறார்களோ அதனை அரசுகள் செய்ய வேண்டும். தங்களிடம் பலம் இருக்கிறது என்று அத்துமீறில் ஈடுபட கூடாது. ஆனால், மக்களின் எண்ணங்களுக்கு விரோதமாக தற்போது மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களின் இந்த நடவடிக்கை காஷ்மீர் மக்களுக்கு சந்தோஷத்தை தரபோவதில்லை. இன்னும் நாட்கள் செல்லசெல்ல அங்கு எந்தமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியவில்லை. அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்களின் உரிமைகளையும் பறிக்கலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் காலத்திடம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்பது மட்டும் உண்மை.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானிடம் இருந்து மீட்போம் என்று மத்திய அரசு கூறியுள்ளதே? 

ஆக்கிரமிப்பு காஷ்மீரை என்ன, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை மீட்பேன் என்று கூட சொல்வார்கள். யார் எதிர்த்து கேள்வி கேட்க முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இவ்வாறு கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதை எதையும் அந்த மாநில மக்கள் நம்ப போவதில்லை. இந்த முடிவுக்காக ஆளும் தரப்பினர் வருத்தப்படுவார்கள். எனெனில் மக்களின் எண்ணங்களுக்கு மாறாக அரசுகள் மேற்கொண்ட எந்த ஒரு நடவடிக்கையும் வெற்றிபெற்றது இல்லை.

அதிமுக இதனை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்களே அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது இதைதவிர. பாஜகவின் அடிமைகளாக மாறி போன அவர்களிடம் நீதி, நியாயத்தை எதிர்பார்ப்பது என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது போல. அவர்கள் அடிமைகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.