Skip to main content

மோடிக்கு மீண்டும் வாய்ப்பு எப்படி கிடைக்கும்?

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

'கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையிலும் நெய் வடியுதுனு சொல்வாங்க’ என்பது கிராமத்து சொலவடை. அதை நினைவுபடுதுகிறதுகின்றன, மோடி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கு என்ற கருத்துக்கணிப்புகள். தெரிஞ்சோ தெரியாமலோ பாஜகவும் கூட்டணியும் சேர்ந்தே பெரும்பான்மைக்கு சற்று திணறும் என்கிற அளவுக்கு கருத்துக்கணிப்புகளை அடக்கி வாசித்திருக்கிறார்கள்.

 

modi

 

இதற்கு காரணமே, நாடு முழுவதும் வீசுகிற மோடி எதிர்ப்பு அலைதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் அனைத்துத் தரப்பு மக்களின் வெறுப்பைச் சந்திக்கிற அளவுக்கு மோடி தனது நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார். மக்களுடன் நேரடி தொடர்பே இல்லாமல், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களைச் சந்திக்கக்கூட முன்வராமல் அரசியலை அவர் நடத்தினார். கார்பரேட் முதலாளிகள் மட்டுமே மோடியை சந்திக்க முடியும், அவர்களுக்காகவே புதிய திட்டங்களை அறிவிப்பார் என்ற மனநிலை மக்கள் மத்தியில் பரவிவிட்டது.

 

குறிப்பாக, மனிதர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், மாடுகளின் பாதுகாப்புக் குறித்தே அவர் கவலைப்பட்டார். மாடுப்பாதுகாப்பு குண்டர்களின் தாக்குதலுக்கு நான்கு ஆண்டுகளில் மட்டும் 400 பேர் பலியாகி இருக்கிறார்கள். மருத்துவமனைகளின் தேவைகள், கல்வி நிறுவனங்களின் தேவைகள் குறித்து மோடியும் பாஜக அரசும் கவலைப்படவே இல்லை.

 

மோடி தனக்குச் சாதகமாக சொல்லிக்கொள்ள ஒரு சாதனையைக் கூட செய்யவில்லை. அவருடைய அனைத்து நடவடிக்கைகளிலுமே மக்கள் தங்கள் பணத்தையும் பொருளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்களே தவிர அவர்களுக்கு நல்லது எதுவுமே நடக்கவில்லை. ஆனால், கார்பரேட் முதலாளிகளுக்கு மோடி திறம்பட ஆட்சி நடத்தியிருக்கிறார் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் மோடி மீண்டும் பிரதமராவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு சில கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அந்தக் கருத்துக்கணிப்பை படித்துப்பார்த்து மோடியும் அமித் ஷாவுமே சிரி்த்திருப்பார்கள்.

 

தெலங்கானாவிலும் ஆந்திராவிலும் 2,

 

அருணாச்சல பிரதேசத்தில் 1,

 

அசாமில் 7,

 

பிகாரில் 22,

 

சத்தீஷ்கரில் 10,

 

கோவாவில் 2,

 

குஜராத்தில் 26,

 

ஹரியானாவில் 7,

 

ஹிமாச்சலில் 4,

 

காஷ்மீரில் 3,

 

ஜார்கண்ட்டில் 12,

 

கர்நாடகாவில் 17,

 

ம.பி.யில் 27,

 

மகாராஷ்டிராவில் 23,

 

ஒடிஷாவில் 1,

 

பஞ்சாபில் 2,

 

ராஜஸ்தானில் 25,

 

தமிழ்நாடு 1,

 

உத்தரப்பிரதேசத்தில் 71,

 

உத்தரகாண்ட்டில் 5,

 

மேற்கு வங்கத்தில் 2,

 

அந்தமான் 1,

 

சண்டீகர் 1,

 

தத்ரா மற்றும் நாகர் ஹவேலி 1,

 

டாமன் டையு 1,

 

டெல்லி 7

 

பாஜக மொத்தமாக பெற்ற 282 தொகுதிகளில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஸ்டிரா, குஜராத், சத்தீ்ஸ்கர், ஹரியானா, கர்நாடகா, அசாம், ஜார்காண்ட் ஆகிய மாநிலங்களில் மட்டும்  252 இடங்களைப் பெற்றிருக்கிறது. ராஜஸ்தானில் 25க்கு 25 இடங்களையும், மத்தியப்பிரதேசத்தில் 29க்கு 27 இடங்களையும், சத்தீஸ்கரில் 11 இடங்களில் 10 இடங்களையும், உத்தரப்பிரதேசத்தில் 80 இடங்களில் 71 இடங்களையும், டெல்லியில் 7க்கு 7 இடங்களையும், ஹரியானாவில் 10க்கு 7 இடங்களையும் பெற்றிருக்கிறது. 2014 தேர்தலின்போது ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.

 

modi

 

ஆனால், இந்தமுறை இந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. குஜராத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே மோடி அழுது வாக்குக் கேட்டார். ஹர்திக் படேல் என்ற சின்னப்பையன் மோடியை கதறவிட்டான். பிரதமராய் இருந்தும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்கு 20-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார் மோடி. பாகிஸ்தானுடன் மன்மோகன்சிங் ரகசிய சதி என்று ஒரு பொய்யை தூக்கிப் போட்டார். ஏழை என்பதால்தான் தன்னை ஒழித்துக்க ராகுல் முயற்சி செய்வதாய் பொருத்தமில்லாத பொய்யை கூச்சமே இல்லாமல் சொல்லி தேம்பி அழுது நாடகம் போட்டார். அப்படியும் குஜராத்தில் போன தேர்தலைக் காட்டிலும் 16 இடங்கள் குறைவாகப் பெற்றார். காங்கிரஸின் வாக்குச் சதவீதமும் இடங்களும் அதிகமாகின.

 

நிலமை இப்படி இருக்கையில் மேற்படி மாநிலங்களில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களில் பாதி இடங்களைப் பெறுவதே கஷ்டம் என்பதுதான் நிலைமை.

 

 

 

 

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Priyanka Gandhi hits back at Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

 Priyanka Gandhi hits back at Prime Minister Modi

இந்நிலையில் தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில், “கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்களிடமிருந்து உங்கள் தாலியையும் தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக சிலர் கூறுகின்றனர். மங்கள சூத்திரத்தின் முக்கியத்துவத்தை மோடி புரிந்துகொண்டிருந்தால் இதுபோன்ற விஷயங்களை அவர் கூறியிருக்கமாட்டார். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது உங்கள் தங்கமான மங்களசூத்திரத்தை யாராவது பறித்துச் சென்றார்களா?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது எனது சகோதரிகள் தங்களுடைய மங்களசூத்திரங்களை அடமானம் வைக்க நேரிட்டபோது பிரதமர் எங்கே இருந்தார்?. விவசாயிகள் போராட்டத்தின் போது சுமார் 600 விவசாயிகள் வீரமரணம் அடைந்தபோது, அவர்களின் விதவைகளின் மங்களசூத்திரங்களைப் பற்றி அவர் நினைத்தாரா?. நாடு போரில் ஈடுபட்ட போது, எனது பாட்டி இந்திரா காந்தி தனது மங்களசூத்திரம் மற்றும் நகைகளை நன்கொடையாக வழங்கினார். மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா?. என் அம்மா தனது தாலியை தேசத்திற்காகத் தியாகம் செய்தார். இது போன்று இந்த நாட்டிற்காக லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் மங்களசூத்திரத்தை தியாகம் செய்தனர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே சமயம் கடந்த 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - சீனப் போரின்போது இந்திரா காந்தி தனது நகைகளை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்கிய புகைப்படம் என ஒன்றை சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் தரப்பினர் பகிர்ந்து வருகின்றனர். அதில், “மக்களின் சொத்துகளை காங்கிரஸ் கைக்கொள்ளும் என்று மோடி விமர்சிக்கிறார். ஆனால் நிஜத்தில் காங்கிரஸ் தலைவர்கள் நாட்டுக்காக தங்கள் சொத்துகளை வழங்கியவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர்.