Skip to main content

21 நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி போதுமா..? - பூங்கோதை ஆலடி அருணா!

Published on 08/04/2020 | Edited on 08/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 140-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இதன் ஒருபகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

jk



ஒரு எதிர்ககட்சி உறுப்பினராக இந்த ஊரடங்கு, கரோனா தொற்று, அதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தக் கரோனா வைரஸ் விஷயத்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி இதெல்லாம் தேவையில்லை. கரோனா வைரஸ்க்கு கருப்பு, வெள்ளை, ஏழை, பணக்காரன் என எதுவும் தெரியாது. அதற்கு மனித இனத்தை மட்டும்தான் தெரியும். அந்த உணர்வோடு இந்த விஷயத்தை நாம் அணுக வேண்டும். மத்திய அரசைப் பொறுத்த வரையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. மற்ற நாடுகளை விட பாலிசி விவகாரத்தை இந்திய அரசு அருமையாக வைத்திருக்கும்.ஆனால் தற்போது அது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இந்தியா முக்கியத்துவம் கொடுக்காத மாதிரியே உள்ளது. தற்போதைய சுழ்நிலையில் இந்த மாதிரியான நோய்களைக் கட்டுப்படுத்தும் கட்டமைப்பே நம்மிடம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த ஊரடங்கை ஒருவிதத்தில் வரவேற்றாலும் இந்த 21 நாட்களுக்கு மேல் நம்முடைய பொருளாதாரம் தாங்காது. இதை நான் மட்டும் கூறவில்லை பொருளாதார வல்லுநர்களே அதைத்தான் கூறுகிறார்கள். 

 

http://onelink.to/nknapp



இருந்தாலும் இந்த ஊரடங்கு என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதானே? 

அப்படி என்றால் ஏழைகளுக்கு அனைவருக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனாவால் உயிரிழப்பவர்களை விட பசியால் உயிரிழப்பவர்கள் அதிகமாகி விடக்கூடாது என்று கவலை கொள்கிறோம்.இன்னும் இந்த ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்றால் அதற்கான முன்னெடுப்புக்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அரசு ஏராளமான உணவு தானியங்களைச் சேமித்து வைத்துள்ளது.

அவற்றை எல்லாம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும். நம்மிடம் மனித உழைப்பு இருக்கின்றது. அதனை மறுபடியும் நம்மால் சேகரித்துக்கொள்ள முடியும். பணத்தைத் தேவையான அளவு கொடுங்கள். 500 ரூபாய் மத்திய அரசு கொடுத்தால் அதனை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும். கணவன் , மனைவி மூன்று குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு இது போதுமா? 5 கிலோ அரிசி கொடுப்பதெல்லாம் காணாது. 20 கிலோ கொடுங்கள். ஏழைகளுக்கு அரசாங்கம் துணையில்லை என்றால் வேறு யார் துணை இருப்பார்கள். 

 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.