Skip to main content

"வாக்கு அரசியல் என்பது அரசியலின் பாலபாடம்... அதைச் செய்ய வேண்டாம் என்பது எந்த வகையில் நியாயம்.." - மருத்துவர் காந்தராஜ் கேள்வி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

hk

 

தமிழக முதல்வர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்தல், புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அப்போது திடீரென பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளுதல், மாநகர பேருந்துகளில் ஏறி பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிதல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டாலும், சிலர் இதனை வாக்கு அரசியல் என்ற வளையத்திற்குள் கொண்டு செல்கிறார்கள், முதலமைச்சரின் ஆய்வு தொடர்பாகச் சிலரிடம் கருத்துக்களைக் கேட்டுள்ளோம், அந்த கருத்துக்கள் வருமாறு...

 

இது தொடர்பாக மருத்துவர் காந்தராஜ் கூறும்போது, " அரசியலே வாக்குக்காகச் செய்யப்படுவது தானே, நல்லது ஒருவர் எதற்காகச் செய்கிறார், இதைக் காட்டி திரும்பவும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தானே! நீங்கள் நல்லா இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி உங்களுக்கு நல்லது செய்தால் 50 பேர் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்பதுதானே அரசியலின் தார்மீகப்பாடம். அதைச் செய்ய வேண்டாம் என்பது, அதைக் குறை சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. மக்கள் எல்லாம் ஆட்சியாளர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள், வாக்குகள் மூலம் தானே, அப்புறம் வாக்கு அரசியல் செய்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். வாக்கு வாங்க என்ன செய்ய வேண்டுமோ அதனை அரசியல் தலைவர்கள் செய்வார்கள், அதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. நல்லது செய்தால் அதை ஏன் ஆராய வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே, அதில் ஏன் தயக்கம். இவரின் திடீர் ஆய்வு அடுத்தவர்களையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது. இதைப் பாராட்ட வேண்டும். என்று கூறினார்..

 

இது தொடர்பாக திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறும்போது, " வாக்கு அரசியலைச் செய்துதான் ஆக வேண்டும், பாஜக போன்ற மதவாதிகள் தமிழகத்தில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனில் அதை நாம் செய்துதான் ஆகவேண்டும். நாங்கள் வாக்கு அரசியல் செய்வோம், அவர்கள் நாக்கு அரசியல் மட்டும் தான் செய்வார்கள். அவர்களால் நல்லது செய்வதை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே எதையாவது பேசிக்கொண்டே தான் இருப்பார்கள், அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நாங்கள் எல்லாம் வாக்கு வாங்க அரசியல் செய்கிறோம், வெற்றி பெறுகிறோம், இவர்களால் அதையும் செய்ய முடியாது, வேறு ஏதாவது செய்ய முடியுமா என்றால் அதுவும் கூட முடியாது. வெற்று கூச்சலைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை" என்றார்.

 

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.