Skip to main content

தினமும் லேட்டாக வந்த மகள்... தந்தையை பற்றி போலீஸிடம் பொய்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Published on 29/10/2019 | Edited on 30/10/2019

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்ற தாயை மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ஹயத் நகரில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவருடைய மனைவி ரஞ்சிதா. இந்த தம்பதிக்கு கீர்த்தி என்ற மகள் உள்ளார். இவர் விசாகபட்டணத்தில்  இருக்கும் ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். லாரி டிரைவரான சீனிவாஸ் வேலைக்கு சென்று விட்டு நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது மகள் கீர்த்தியிடம் ரஞ்சிதா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி நான் கல்லூரிக்கு சென்று விட்டேன். அதனால் எனக்கு தெரியவில்லை என்று தனது தந்தையிடம் கூறியுள்ளார். பின்பு சீனிவாஸும், கீர்த்தியும் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ரஞ்சிதாவை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். 

 

incident



இது பற்றி போலீஸார் முதலில் கீர்த்தியிடம் விசாரித்துள்ளனர். அப்போது எனது அப்பா மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து எனது அம்மாவை அடித்து துன்புறுத்துவார். அதனால் அவர் கொலை  செய்திருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன் பின்பு சீனிவாஸிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் நான் நான்கு நாட்கள் வேலைக்கு சென்றுவிட்டேன், வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார். அதன் பின்பு ரமணாப்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தின் அருகில் அழுகிய நிலையில் ஓர் பெண் சடலம் இருப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த உடலை கைப்பற்றிய போலீஸாருக்கு அது ரஞ்சிதாவின் உடல் என்று உறுதியானது. இதற்கு பிறகு கீர்த்தி மீது போலீஸாருக்கு அதிக சந்தேகம் வந்துள்ளது. 

 

ranjitha



பின்பு கீர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதில் கீர்த்தி தனது வீட்டருகே சசி எனும் வாலிபரை காதலித்து வந்துள்ளார். தினமும் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு லேட்டாக வந்துள்ளார். இதை கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கீர்த்தி தனது காதலன் சசியுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு ரொம்ப லேட்டாக வந்துள்ளார். இதனால் கீர்த்தியின் அம்மா ரஞ்சிதா இனிமேல் இப்படி வந்தால் உனது அப்பாவிடம் கூறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு தான் தனது அம்மாவை கொலை செய்ய கீர்த்தி திட்டம் தீட்டியுள்ளார் அதற்கு காதலனும் உடந்தையாக இருந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.


மேலும் விசாரணையில், ரஞ்சிதா இரவில் தூங்கும் போது தனது காதலன் சசியை வீட்டிற்கு வரவழைத்து ரஞ்சிதாவின் கை, கால்களை இறுக்க பிடிக்க சசியிடம் கூறியுள்ளார். அதன் பின்பு தனது தாயின் கழுத்தை நெரித்து கீர்த்தி கொன்றுள்ளார். கொலை செய்து விட்டு ரஞ்சிதாவின் உடலை வீட்டிலேயே வைத்துள்ளார் கீர்த்தி. பிறகு உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து ரஞ்சிதாவின்  உடலை  காதலனோடு சேர்ந்து ரயில் தண்டாவாளத்தில் போட்டு விட்டு வந்துள்ளார். காதலுக்காக பெற்ற மகளே தனது தாயை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

 

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது