Skip to main content

நாங்குநேரியில் நடந்தது என்ன? - எவிடன்ஸ் கதிர் விளக்கம் 

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Nanguneri issue evidence kathir
கோப்புப் படம் 

 

நாங்குநேரி சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நீங்கள் களத்திற்கு சென்றுள்ளீர்கள். அங்கு என்ன நடந்தது?


இந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி இரவு 10.30 மணியளவில் பதினேழு வயது சிறுவன், தனது வீட்டில் தங்கை, அம்மாவுடன் பக்கத்து வீட்டு அம்மையார் பாத்திமா உடன் இருந்துள்ளார். சாப்பிடுவதற்கு எல்லோரும் தயாரான நிலையில் வீட்டினுள் மூன்று சிறுவர்கள் நுழைந்துள்ளனர். அதில் இரண்டு பேருக்கு பதினேழு வயது. மற்றொருவனுக்கு பதினாறு வயது. இரண்டடி நீளமுள்ள அரிவாளுடன் நுழைந்தவர்கள் அங்கு இருந்த அந்த பட்டியிலன மாணவனின் கழுத்திலும், தலையிலும் தாக்க முற்படுகிறார்கள். தாக்குதலை தடுக்க முயன்ற பாதிக்கப்பட்ட மாணவருக்கு இரண்டு கைகளிலும் வெட்டுக் காயங்களுடன் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அங்குள்ள மருத்துவர் கூறுகையில் தோள்பட்டையிலும், தொடையிலும் காயம் உள்ளது என்றார். இத்தாக்குதலை தடுக்க சென்ற தங்கையையும் அரிவாளால் தாக்கியுள்ளனர். அந்த வீடு முழுவதும் ரத்தம் படிந்து அறை தொடங்கி, படி, தெரு வரை கரைகள் இருந்தன. இச்சம்பவத்தை நிகழ்த்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். இதுவரை இதில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஏழு பேர் வரை கைதாகியுள்ளனர். மேலும் சிலர் அங்கு இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்ததுள்ளது. இதுவரை கைதானவர்களில் மூன்று பேருக்கு 16 வயதும், நான்கு பேருக்கு 17வயதும் என சொல்லப்படுகிறது. இந்த எழுவரில் இரண்டு நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட மாணவருடன் பயிலும் சக மாணவர்கள். இவர்கள் இருவரும் தெருவில் தரிசாக சுற்றித் திரிபவர்கள் என அங்கு பேசியபோது தெரிந்தது. 

 

இவர்கள் இருவரும், பெண் ஆசிரியர்களை கிண்டல், கேலி செய்வது, ஊளையிடுவது போன்ற காரியங்களையும் செய்துவந்துள்ளனர். அதேபோல், மாணவர்களை மிரட்டியும் வந்துள்ளனர். இரண்டு முறை அவர்கள் பள்ளி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பிறகு பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் பள்ளி நிர்வாகம் மாணவர்களை மன்னித்துள்ளது. ஆனால், இவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனை சிகரெட் வாங்கி வரச் சொல்வது. பணத்தை பறிப்பது முதல் சாதி பெயரை சொல்லி ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதுமட்டுமன்றி, இன்னும் பல கொடுமைகளை பாதிக்கப்பட்ட மாணவர் அனுபவித்துள்ளார். இதனால், கடந்த பத்து நாட்களாக பாதிக்கப்பட்ட மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளார். தன்னை வேறொரு பள்ளிக்கூடத்திற்கு மாற்றுமாறு அல்லது சென்னைக்கு வேலை பார்க்க அனுப்புமாறு தாயிடம் கூறிவந்துள்ளார்.

 

பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தை அவர்களின் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தாய் வீட்டு வேலை செய்பவர். குடும்பச் சூழலால், தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவன் சொல்லவில்லை. ஆனால் தாக்குதலை நடத்திய இருவர், பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் அந்தப் பகுதியில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதும் தெரியும். பாதிக்கப்பட்ட மாணவன் தனக்கு நேர்ந்ததை மறைத்ததற்கு அச்சம் தான் காரணம். ஆகஸ்ட் 9 ம் தேதி பள்ளி ஆசிரியை, மாணவனின் அம்மாவிடம் அலைபேசியில், “உங்க பையன் நல்லாப் படிக்கிற மாணவன். தயவு செய்து பள்ளிக்கு அழைத்து வாருங்கள்" எனக் கூறியுள்ளார். ஆசிரியரிடம் நடந்ததை மாணவன் கூற, அதனைப் புகாராக எழுதி தரச் சொல்லியுள்ளனர். இதனைச் சாதிய பாகுபாடு தான் என அறிந்த நிர்வாகம், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வியாளரிடம் தெரிவிக்க முடிவெடுத்துள்ளனர். இதை அறிந்த இரண்டு மாணவர்களும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பள்ளிக்குச் செல்லவில்லை. இந்த விவரம் அறிந்த ஒரு மாணவனின் பாட்டியும், சித்தாப்பாவும் பாதிக்கப்பட்ட மாணவனின் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்களிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் அம்மா, “உங்க ரெண்டு பசங்களால தான் என் பையன் இன்னைக்கு படிப்பே வேணாம்னு சொல்றான். கல்வி தான் எங்களுக்கு இருக்கிற ஒரே சொத்து” என சம்பவம் பற்றி விவரித்துள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ந்த இரவில் தான் அரிவாள் வெட்டும் நடந்தேறியுள்ளது. 9 ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மறுநாள் மாலை நான் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு சென்றேன். அங்கு அந்த மூன்று மாணவர்களும் அமர்ந்திருந்தனர். தாக்குதல் குறித்தான குற்ற உணர்ச்சியில்லாமல் அந்த மூன்று சிறுவர்களும் அங்கு விளையாடிக்கொண்டிருந்தனர்.  

 

மாணவர்கள் பெஞ்சில் அமர்த்தப்பட்டிருந்தனர். காவல் நிலையம் குறிப்பிட்ட சாதியின் திடல் போல இருந்ததும், அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானால் நிகழ்த்தும் படி இருந்தது. அங்கு இருக்கும் பெரும்பான்மை சாதியினரின் குடியிருப்புகளுக்கு மத்தியில் அந்த காவல்நிலையம் இருக்கிறது. அந்தக் குடியிருப்புகளின் சுவர்களில் எல்லாம் அந்த சாதியின் அடையாளம் இருக்கிறது. அந்த காவல் நிலையம் சாதிய மந்தை போலக் காட்சியளித்தது. அப்படி இருப்பதாலே அவர்கள் மூன்று பேரும் எந்தவொரு கவலையும் இல்லாமல் உட்கார்ந்துள்ளனர். தாக்குதல் நடத்திய மாணவர்கள் தென்காசியில் இருந்து அழைத்து வரப்பட்டு இரவு எட்டு மணியளவில் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விசயம், ஒரு வேளை அவர்களின் கைகளில் இரண்டு கத்திகள் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மாணவன் மரணித்திருக்கலாம். ஒரு கத்தியால் கழுத்து மற்றும் தலைப் பகுதியை மாறி மாறி அவர்கள் இருவரும் தாக்கியதால் அதில் கிடைத்த சில நிமிடங்களில் அந்த மாணவனால் கூச்சலிட்டு தன்னை தற்காத்துக் கொள்ள முடிந்தது. 

 

இந்த சம்பவமானது பாதிக்கப்பட்ட மாணவனின் தாய், தங்கை, பக்கத்து வீட்டு பாத்திமா உள்ளிட்டோரை கலங்கடித்துள்ளது. வெட்ட வந்தவர்களிடம், "அண்ணா விட்ருங்க" எனக் கதறியிருக்கிறார் அந்த சிறுமி. அந்த சிறுமி கெஞ்சிய பின்னும் வெட்டும் அளவுக்கு வெறி எங்கிருந்து இவர்களுக்கு வந்தது. ஒரு கூலிப்படையைப் போல இவர்கள் தாக்கியுள்ளனர். பள்ளியில் சில மாணவர்கள் முரட்டுத் தனமாக நடந்து கொள்வது போல அல்லாத சாந்தமாக உள்ள மாணவன் தான் பாதிக்கப்பட்ட மாணவன். அவனையே வெட்டும் அளவிற்கு ஜாதி ஊன்றியுள்ளதை இது காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மாணவனின் அம்மா, " என் பிள்ளைக்கு சாதி பற்றியே தெரியாது. அவர்கள் தான் இவனை சாதி பெயர் சொல்லி அவமானப் படுத்தியுள்ளனர்"   என்கிறார். 

 

 

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.