Skip to main content

மத்திய அரசின் தொடர் தோல்விகள்... 

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

மத்திய அரசாக பாஜக பதவியேற்றது முதல் அதாவது 2014 முதலே ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்பதை மிக தீர்க்கமாக தொடங்கியது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்நாடுதான். எந்தளவிற்கு என்றால் தமிழ்நாடு என்ற பெயர்கூட அவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாக அதை தொடர்ந்தார்கள். 
 

modi amitshah


அதற்கேற்றார்போல் தற்போதைய ஆட்சியாளர்களும் செயல்பட்டனர். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதில் தீவிரமான ஆட்சியாளர்களால் அனைத்து பிரச்சனைகளுக்கும் மக்களே நேரடியாக களத்திற்கு வந்து போராடும்படி ஆனது, எதிர்கட்சிகளாலும், இயக்கங்களாலும் அது வலுப்பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம், கல்வி மாநிலப்பட்டியலிலிருந்து, மத்திய பட்டியலுக்கு சென்றது அதன்விளைவாக வந்த நீட், தமிழ்நாடு இல்லம் பெயர்மாற்றம், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது, ஹைட்ரோ கார்பன், புயல்கள் வந்தபோது அவர்களின் நடவடிக்கை இப்படி 2018 முழுவதும் போராட்டக் களமாகவே இருந்தது தமிழ்நாடு. இவற்றிற்கு பதிலாகதான் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதோடும் முடியவில்லை.

மோடி சர்க்கார் 2.0 வின் தொடக்கத்திலேயே மும்மொழிக்கொள்கை என மீண்டும் போராட்டத்தைக் கிளப்பியது. அதைத்தொடர்ந்து தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று தெற்கு இரயில்வே கூறியது. ஆனால் இவையெல்லாம் கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு மீண்டும் பெறப்பட்டன. இப்படி தமிழ்நாட்டிற்கு தொடர்ந்துவந்த பிரச்சனைகளையெல்லாம் தமிழ்நாடு மிகப்பெரிய எதிர்ப்பால் நிறுத்தியுள்ளது. நிறுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தமிழ்நாடு சிறிது வித்தியாசமானது. பிரச்சனைகளுக்கேற்றார்போல் முடிவெடுக்கக்கூடியது, ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டுக்காக உழைத்தவர்களை மறக்காதது, தன்னை அரவணைத்து செல்ல நினைப்பவரை அணைக்கும், திணிப்பவர்களை எதிர்க்கும், தனது சுயத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும்.

அதனால்தான் மிகவும் பெரும்பான்மையான மக்கள் இங்கு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தும், கடவுளே இல்லையென்று சொன்ன பெரியாரின் சிலையை உடைத்தபோது கொந்தளித்து, மிகவும் தீவிர எதிர்வினையாற்றியது. இந்துத்துவாவை பரப்பவந்த ரதயாத்திரை பறந்துபோனது. தமிழ்நாடு எப்போதும் தனக்கு தேவையானதை தானாக வரவேற்றுக்கொள்ளும், வேண்டாததை யார் திணித்தாலும் எதிர்த்து நிற்கும் திறன்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.