Skip to main content

சீனா எங்கே? இந்தியா எங்கே? தனிமைப்படுத்திய தந்திரம்!- பகுதி: #2

Published on 13/10/2019 | Edited on 13/10/2019

தோற்றுப்போன வெளியுறவுக் கொள்கை!

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் சைனாவினுடைய ஆதிக்கம் என்ன? இந்தியாவுக்கு SAARC என்ற  ஒரு அமைப்பு இருந்தது. இந்த SAARC அமைப்புகளை  கடந்த 10-20  ஆண்டுகளில்.. இந்தியா தன் கைக்குள் வைத்திருந்தால்..  political sphere-ல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்லமுடியும்.  இந்தியாவால் இந்த SAARC அமைப்பே ஒரு முக்கியத்துவம் பெறாத  நிலைக்குத் தள்ளப்பட்டு, இன்று BIMSTEC என்ற அமைப்புக்குத் தாவிவிட்டார்கள். நமது பிரதமரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சொல்கிறார்கள் SAARC அமைப்பு நமக்கு உகந்ததாக இல்லையென்று. ஏன் தெரியுமா? SAARC அமைப்பில் இருந்த அத்தனை நாடுகளும் இந்தியாவைச் சார்ந்துதான் இருந்தன. ஆனால்.. இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டிய அதே நேரத்தில், இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் சைனாவோடும் கைகோர்த்து செயல்பட்டன. political sphere-லயும் SAARC அமைப்பிலுள்ள நாடுகளுடன் சேர்ந்து இருக்கக்கூடிய அளவில் இந்திய வெளியுறவுக் கொள்கை அமையவில்லை. தோல்வி அடைந்திருக்கிறது. 

 

chennai




தனிமைப்படுத்திய தந்திரம்! 

சைனா என்ன செய்தது? ஏற்கனவே வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மட்டுமல்ல..  SAARC  அமைப்பிலுள்ள வளர்ந்துவரும் அத்தனை நாடுகளிலும் சைனாவுடைய projects.. infrastructure products, rail, airport infrastructure, shipping infrastructure, industrial infrastructure, oil infrastructure என அத்தனை infrastructures களிலும் சைனா முதலீடு செய்து அத்தனை நாடுகளையும் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டது. இத்தனை நாடுகளும் சைனாவுக்கு கப்பம் கட்டக்கூடிய நிலையில் இருக்கின்றன.  தொழில் சார்ந்த இந்தப் பொருளாதாரத்தை வைத்து SAARC நாடுகளை சைனா தனிமைப்படுத்திவிட்டது. 
 

இப்போது நடக்கிறதே பேச்சுவார்த்தை! இதில் இந்தியாவும் சைனாவும் equal power. எங்களை நீங்க disturb பண்ணாதீங்க. நீங்க அங்கேயே நின்னுக்கங்க. நாங்க இங்கே நின்னுக்கிறோம்னு பேசுவாங்களா? பேச முடியுமா? இந்தியாவிற்கு அந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், SAARC-ஐ விட்டுவிட்டு, நான் இந்த ஆட்டைக்கு வரல.. எனக்கு இந்த ஆட்டை ஒத்துவராதுன்னு BIMSTEC அமைப்புக்குப் போய்விட்டது. இதன்மூலம் SAARC நாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்தியா இழந்தது. political sphere-லும் எல்லாம் போய்விட்டது. 
 


அதே பிரிட்டிஷ் ஸ்டைலில்!


சரி, Geo-political field-லும் சைனா இன்றைக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பா போய், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சைனா, ஏசியா மற்றும் ஏசியான் வரைக்கும் ONE BELT ONE ROAD என்னும் அருமையான ஒரு திட்டத்தின் மூலம் இந்த நாடுகளையெல்லாம் ‘கனெக்ட்’ பண்ணுது. இப்படி கடல் மார்க்கமாகவும், தரை வழியாகவும் சைனா இன்றைக்கு தனது பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு இலகுவாக்கி வைத்திருக்கிறது. எப்படி பிரிட்டிஷின் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவுக்கு கடல் வழியாக வந்து நம் நாட்டைப் பிடித்ததோ, அதற்கு தகுந்தாற்போல் பிரிட்டிஷ் முழு ராணுவமும் வந்து அவர்களின் வணிகத்திற்கு சப்போர்ட் பண்ணியதோ, எப்படி இந்தியாவை 400 ஆண்டுகாலம் அடிமைப்படுத்தினார்களோ, அதுபோல, நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகளை தற்போது Geo political sphere-லும் சைனா வெற்றி கண்டிருக்கிறது. இந்தியா அதனுடன் கைகோர்க்கவில்லை என்றாலும் சைனா பரவலாக்கி வருகிறது. சரி, இந்தியா என்ன பண்ணியிருக்கிறது? ஜியோ பொலிடிகலா என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?  நம்மிடம் இருந்த SAARC அமைப்பையே விட்டுவிட்டோமே!.  

 

china and india



 

போர் வராமல் காக்கும் சக்தி!

நம்ம கிட்ட இருக்கிற ஒரே டிரென்ட் ஆட்டம்-பாம்..  நியூக்ளியர் வெப்பன். அது ஒண்ணுதான் இந்தியாவுக்கும் சைனாவுக்கும் போர் வராம காத்துக்கிட்டு இருக்கு. சைனா இந்தியா மேல போர் தொடுக்கவே தொடுக்காது. ஏனென்றால், சைனாவுக்கு எகனாமிக் இன்ட்ரஸ்ட் தான். எகனாமிக் இன்ட்ரஸ்ட்டுக்கு இந்தியாகூட கை கொடுக்க வரும். நாம் வாங்கக் கூடிய நாடு. ஆனால், ஏந்தக் கூடிய நிலையில் இருக்கிறோம். நாம் ஏந்தித்தான் ஆகணும்.  வேற வழியில்லை. ஏனென்றால், இந்தியாவில் இருக்கக்கூடிய  infrastructures-ம் சரி..  தொழிற்சாலைகள் மற்றும் small scale, medium scale industries-ம் சரி,  ஒவ்வொன்றாகத்  திட்டம் போட்டு ஒழிக்கப்பட்டு வருகிறது. நீங்க எப்படி சைனாவோட manufacturing hub ஆக முடியும்?  


make in india அப்படின்னீங்க. made in india- வில் பண்ணுன light combat aircraft-ஐயே make in india-வில் பண்ண முடியலியே? நீங்க இப்ப ரபேல் விமானம்ல வாங்கிட்டு இருக்கீங்க.  இங்கே உற்பத்தி பண்ணக்கூடிய கூடிய,  இங்கே டிசைன் பண்ணக்கூடிய சுய indigenous development-க்கு இந்தியா எந்த அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கிறதென்று  பார்த்தால்.. ஜீரோ.  பிறகு நாம்  எப்படி அவர்களுடன்  trade deficit குறித்து  உட்கார்ந்து பேச முடியும்? சைனாவுடன் தலை நிமிர்ந்து கை கொடுக்கக்கூடிய பொருளாதார பலத்தை நாம் உருவாக்கியிருந்தால், கண்டிப்பாக இன்றைக்கு  சரிசமமாக கை கொடுத்திருக்க முடியும். ஆனால், இந்தியாவின் வளமும், நீர்வளம், நிலவளம், மனிதவளம் என இத்தனை வளமும்  சைனாவுக்கு ஒன்றில்கூட குறைந்தது கிடையாது. இன்றைக்கு 5- ஜி தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கான பேச்சு வார்த்தை நடந்திருக்கலாம்.
 

முந்தைய பகுதி: 

சீனா எங்கே? இந்தியா எங்கே? சந்தித்த வேளையில் சிந்தித்தாரா மோடி?- பகுதி: 1.  


 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.