Skip to main content

பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் தர்றார்... எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி...

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

சூடுபிடித்துள்ளது வேலூர் எம்.பி. தேர்தல் களம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுங்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிகார அமைப்புகளின் பறக்கும்படை, வருமான வரித்துறை, மத்திய- மாநில உளவுத்துறை, சி.பி.ஐ. புலனாய்வுக்குழு போன்றவை களமிறக்கப்பட்டுள்ளன. பரிசுப் பொருள் கொடுப்பதை தடுக்க எனச் சொல்லி சுமார் 58 குழுக்களை உருவாக்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். அதோடு பறக்கும்படை கண்காணிப்புக் குழு என மொத்தம் 108 குழுக்கள் உள்ளன. இவையெல்லாம் வாக்குப்பதிவு நெருங்க, நெருங்க தி.மு.க.வை மட்டுமே குறிவைக்கப் போகிறது என்கிற தகவலால் தி.மு.க. தலைமை, கட்சி பட்டாளத்தை வேலூரில் முகாமிட வைத்துள்ளது. "ஆளுந்தரப்பினர் அதிகார அத்துமீறல் நடத்துவார்கள்' என தி.மு.க. தலைவர் அறிக்கைவிட்டு எச்சரித்துள்ளார்.

 

dmk



கடந்த 12-ந் தேதி வேலூர் அடுத்த புதுவசூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஏழுமலை என்பவர் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தி.மு.க. வேட்பாளர் பணம் என தகவல் பரவியது. ""தி.மு.க. பிரமுகர்கள் வச்சிருக்கற பணமெல்லாம், வேட்பாளர் பணமாகிடுமா? ஏழுமலை காங்கிரசில் இருந்து தி.மு.க.வுக்கு வந்தார். வேலூரில் பிர பலமான ரியல் எஸ்டேட் அதிபர். எழுதப் படிக்க தெரியாத அவர், ஒரு சொத்தை கைமாற்றியுள் ளார். அதற்கான தொகை வந்துள்ளது. அதோடு, வருமானவரித்துறை, தேர்தல் களத்தில் பண நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்துள்ளது. அதை பார்த்துவிட்டு யாரோ தகவல் சொல்ல... அதன்படி ரெய்டு நடத்தி பணத்தை பறிமுதல் செய்துள்ளது. புடிக்கற பணமெல்லாம் எங்க பணம்ன்னு சொல்றது வேடிக்கையா இருக்கு'' என்கிறார்கள் தி.மு.க. தரப்பினர். ஆனாலும் வேட்டை தொடர்கிறது.
 

admk



இதனை எதிர்கொள்ள ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு முன்னாள் அமைச்சர் என பொறுப்புகளை தந்துள்ளது தி.மு.க. தலைமை. பொன்முடி, எ.வ.வேலு, முத்து சாமி ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் வந்து முதல்கட்ட ஆலோசனைகளை முடித்துவிட்டு சென்றுள்ளனர். வழக்கறிஞர் அணியும் களமிறக் கப்பட்டுள்ளது. அமைப்புச் செய லாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத் துறை செயலாளர் சண்முகசுந்த ரம் தலைமையில் ஜூலை 14-ந் தேதி வேலூரில் ஒருங்கிணைந்த வழக்கறிஞர் அணி கூட்டத்தில், ""நம் கட்சி நிர்வாகிகளை குறி வைத்து காவல்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை என பலவற்றை களத்தில் இறக்கி பா.ஜ.க. உத்தரவில் அ.தி. மு.க. அரசாங்கம் நம்மை மட்டும் குறிவைத்துள்ளது. தேர்தல் களத் தில் பணியாற்றும் கட்சி நிர்வாகி களை பாதுகாப்பது நமது கடமை, அப்போதுதான் தேர்தல் வேலை தடையில்லாமல் நடக்கும், அதனால் வழக்கறிஞர் அணி கவனமாக இருக்கவேண் டும்'' என அறிவுறுத்தியுள்ளனர்.


படுவேகமாக களத்தில் தி.மு.க. இறங்கியுள்ள நிலையில், சில புலம்பல்களும் தி.மு.க.வில் இருந்து கேட்கின்றன. ""அ.தி.மு.க. அணியின் ஏ.சி.எஸ். டீம், வேலூர் மாவட்டத்தில் இயங்கும் சமூக வலைத்தள குழுமங்கள், மீம்ஸ் கிரியேட்டர் குழுக்களை வளைத்து லட்சங்களில் கவனித்து தி.மு.க. வையும், அதன் வேட்பாளரை யும் டேமேஜ் செய்யச் சொல்லியும், ஏ.சி.சண்முகத்தை புரமோட் செய்யச் சொல்லியுள்ளது. தி.மு.க. வில் வலிமையான இணையதள அணியிருந்தும் எங்களை பயன் படுத்திக்கொள்ள மறுக்கிறது'' என்கிறார்கள்.

ஏ.சி.சண்முகம், 6 சட்ட மன்ற தொகுதியிலும் ஒரு ரவுண்ட் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை முடித்துவிட்டு, பிரச்சாரக் களத்தில் இறங்கியுள்ளார். வேலூர் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 14,26,991. இதில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், பள்ளிகொண்டா, வேலூர் தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் சுமார் 3 லட்சம். வேலூர், குடியாத்தம், வாணியம் பாடி பகுதிகளில் பரவலாக வாழும் முதலியார் சமூக வாக்கு கள் மட்டும் 2 லட்சம், அணைக் கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி பகுதிகளில் உள்ள வன்னியர் வாக்குகள் 3 லட்சம், குடியாத்தம், ஆம்பூர், கே.வி.குப் பம் பகுதிகளில் வாழும் நாயுடு வாக்குகள் 1.2 லட்சம், தலித் சமுதாய வாக்குகள் 3.2 லட்சம். மீதி பிற சமுதாய வாக்குகள்.

இதில் தனது முதலியார் சமூக வாக்குகள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள ஏ.சி.சண் முகம், 3 லட்சம் வன்னியர் வாக்குகளைக் கவர வியூகம் வகுத் துள்ளார். தி.மு.க.வுக்கு விழும் நாயுடு வாக்குகளை நம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம் என ஆலோசனை நடத்தியுள்ளது ஏ.சி.சண்முகம் டீம். பா.ம.க.வுக்கு அதிக முக்கியத்துவம் தர்றார் எங்களை மதிக்கமாட்டேன்கிறார்' என தே.மு.தி.க. தரப்பில் அதிருப்தி வெளிப்படும் வேளையில், பா.ம.க. தரப்போ "எங்களை முன்புபோல கண்டு கொள்ளவில்லை' என்கிறது. அதுபோல "எங்களையும்தான் மதிக்கிறதில்லை' என்கிற குற்றச்சாட்டு பா.ஜ.க. தரப்பில் இருந்தும் எழுப்பப்படுகிறது. தொகுதியில் 3 லட்சம் இஸ்லாமிய வாக்குகள் உள்ளன. 

பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பதால் அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்களே அதிருப்தி யில் உள்ளனர். அதனால் பா.ஜ.க.வை ஒதுக்கிவைக் கிறோம் என்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது ஏ.சி.சண்முகம் டீம். அதற்கு பா.ஜ.க.வும் ஒத்துழைக்கிறது. உண்மையில் ஏ.சி.சண்முகம் வெற்றிக்காக அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. தீவிரமாக உழைக்கிறது'' என்கிறார்கள் உள்விபரம் அறிந்தவர்கள். பணத்தை வாரித்தந்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார் ஏ.சி.சண்முகம். பணத்தை கட்சியினரின் கண்களுக்கு காட்ட மறுக்கும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் அப்பா துரைமுருகன், சில அமைப்புகளை தங்கள் பக்கம் இழுக்க சாமியார்களை பயன்படுத்தி வருகிறார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.