Skip to main content

வளைந்த செங்கோலும்; சாதி அரசியலைத் தோலுரிக்கும் கழுவேர்த்தி மூர்க்கனும்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

Nakkheeran Gopal Exclusive

 

சில நாட்களுக்கு முன் நடந்த புதிய பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது எழுந்த சர்ச்சைகளும், சமீபத்தில் வெளியான சாதி அரசியலைத் தோலுரித்துக் காட்டும் கழுவேர்த்தி மூர்க்கனைப் பற்றியும் ஒப்பிட்டு நக்கீரன் ஆசிரியர் பேசியதாவது.

 

சமீபத்தில் நடந்த புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் தனது சனாதன கொள்கைகளைத் தூக்கிப் பிடித்தார் பிரதமர் மோடி என்பதற்கு அங்கு நடந்த கொடுமைகளே சாட்சி. அந்த விழா நடந்தது சாமியார் மடமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், சுதந்திர இந்தியாவில் முதலில் உருவான பாராளுமன்றத்தின் திறப்பு விழாவின் போது, அன்றைக்கு இருந்த பிரதமர் நேரு, குடியரசுத் தலைவர், சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் அங்கிருந்து நமது இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக உருவாக்கினார்கள். ஆனால் நமது பிரதமர் மோடி, இந்தியாவில் சுற்றும் முக்கிய சாமியார்களை அழைத்து ஒரு விழா நடத்தியுள்ளார். மேலும் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் ஒரு பிரதமராக இருக்கும் மோடி தான் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவன், ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்று அவ்வப்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெட்டவெளிச்சமாகக் காட்டி வருகிறார்.

 

தமிழர்களை முட்டாளென நினைத்துக்கொண்டு தமிழர்களைப் பெருமைப் படுத்துகிறோம் என்று சோழர் காலத்து செங்கோல் என்று கூறி ஒன்றை வைத்துள்ளனர். உண்மையில் சொல்லப் போனால் அந்த செங்கோல் சோழர் காலத்து செங்கோலே அல்ல. அதாவது சுதந்திரம் கிடைத்த போது இந்தியாவில் உள்ள முக்கியத் தலைவர்களும் அன்றைக்கு இருந்த பிரதமர் நேருவை சந்தித்து மரியாதை செலுத்தும் விதமாகப் பொன்னாடை அணிவித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்படித்தான் ஒரு ஆதினம் ஒரு செங்கோலை நேருவுக்கு கொடுத்து மரியாதை செலுத்தினார். அந்த செங்கோலை வாங்கிய நேரு அருகில் இருந்த உம்மிடி பங்காரு செட்டி அவர்களிடம் கொடுத்துள்ளார். அந்த செங்கோலை வாங்கிய பங்காரு செட்டி இப்படி மாறி மாறி உருமாற்றி தற்போது பாராளுமன்றம் வரை சென்றுள்ளது. இது புரியாமல் இங்குள்ள அரைவேக்காடு தமிழர்களும் சங்கிகளும் தமிழர்களைப் பெருமைப் படுத்திவிட்டார் எங்கள் மோடி என்று தலைகால் தெரியாமல் குதித்து வருகின்றனர்.

 

அப்படி உங்கள் மோடிக்கு தமிழர்களைப் பெருமைப்படுத்தியே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் அந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற மூன்று கல்வெட்டுகளில் ஒன்று கூட தமிழில் இல்லையே. மாறாக அந்த மூன்று கல்வெட்டுகளில் ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தான் உள்ளது. மேலும் திடீரென்று செங்கோலை தூக்கிக் கொள்வது ஏனோ என்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு மத்தியில் உருவானது தான் இது. இங்கிலாந்தில் உள்ள மன்னர் பதவி ஏற்கும்போதும் பொதுமக்களை சந்திக்கும் போதும் அவ்வப்போது ஒரு செங்கோலை தூக்கிக் கொண்டு செல்வார். எதற்காக என்றால் இது மன்னராட்சி, இந்த நாடு எங்கள் குடும்பத்துக்கு மட்டும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மக்கள் மனதில் விதைக்கத் தான். அதைத்தான் மோடி அவர்களும் நிரூபிக்கிறாரோ என்ற கேள்விகளும் அவ்வப்போது மனதில் எழுகிறது. ஒரு நாட்டுடைய பிரதமர் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என்பதால் அவரை அழைக்காமல்... தான் ஏற்றிருக்கும் சனாதன கொள்கைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டுக்குத் தெரிகிறது.

 

முந்தைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தை கூட இந்த சனாதன கொள்கைகள் அடிப்படையில் தான் அழைக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் 585 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றி தற்போது 888 இருக்கைகள் கொண்ட பாராளுமன்றத்தை மாற்றியது தங்களை கேள்வி கேக்க ஆள் இல்லை என்ற மெத்தனப்போக்கு தான். இதை ஒப்பிட்டு பார்த்தோமேயானால் தற்போது நான் திரையரங்கில் பார்த்த நடிகர் அருள்நிதி நடித்து, இயக்குநர் கௌதம ராஜ் இயக்கிய ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் இருந்த சம்பவத்தை புதிய பாராளுமன்றத்தில் நடந்த கொடுமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஏனென்றால், ஒரு உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் தாழ்ந்த சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவருக்கும் உள்ள நட்பை பிரிக்க, அரசியல்வாதி நடத்தும் சாதி அரசியலைத் தோலுரித்து இந்த படம் காட்டுகிறது. இந்த படத்தில் பல வசனங்கள் இங்குள்ள அரசியல்வாதிகள் நடத்தும் மத அரசியலையும் சாதி அரசியலையும் சாட்டையால் அடிக்கிறது.

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், "எப்போதும் அடி வாங்குபவன் பக்கம் தான் இருக்க வேண்டும் அவனை அடிக்க விடாமல் பார்த்துக் கொள்வதற்காக", “மீசை என்பது ஆண்மையைப் பற்றியோ வீரத்தைப் பற்றியோ சாதியைப் பற்றியதோ அல்ல மாறாக அந்த மீசை என்பது வெறும் மயிறு தான்" என்ற வசனமும், "பதில் அளிக்க மட்டுமல்ல கேள்வி கேட்கவே அறிவு இருக்க வேண்டும்; நாங்கள் கேள்வி கேட்போமேயானால் எதிர்தரப்பினருக்கு பதில் கூற முடியாத அளவுக்கு இருக்கிறது” என்று ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அருள்நிதியின் நண்பரான சந்தோஷ் பேசியுள்ளார். இப்படி தமிழகத்தில் சாதி அரசியலையும் மத அரசியலையும் எதிர்த்து நாங்கள் கேட்டுக்கொண்டிருக்க, மக்களின் பொதுவாக இருக்கும் பிரதமர் மோடி அவர்கள், கேரளா ஸ்டோரி படத்தையும் புதிய பாராளுமன்றத்தின் விழாவில் ஹிந்து சாம்ராஜ்யம் நடத்தி தான் வேறுபட்ட மனிதர் என்று மனுதர்மத்தை தூக்கிப் பிடித்துள்ளார். மேலும் புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவின் போது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட நமது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்முறையைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் அந்த வீராங்கனைகளை அடித்து அராஜகம் நடத்தியுள்ளனர்.

 

பிஜேபி எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங், அங்கு இருந்த மல்யுத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என அனைத்து பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை எதிர்த்து மல்யுத்த வீராங்கனைகள் புதிய பாராளுமன்றத் திறப்பின் போது அந்த இடத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் காவல்துறையின் அராஜகத்தால் அங்குள்ள வீராங்கனைகள் துன்புறுத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து தமிழக முதல்வர் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், "பாராளுமன்ற திறப்பின் போது இச்சம்பவம் நடந்தது கண்டிக்கத்தக்கது; முதல் நாள் அன்றே செங்கோல் வளைந்து விட்டது" என்று கண்டித்து ட்வீட் செய்துள்ளார். மேலும் இந்த கொடுங்கோல் ஆட்சியைப் பற்றி நாம் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.